பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவில் :

 

 

பவானி காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுதுறையில் பவானி
சங்கமேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர் வேதநாயகி சன்னிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சன்னிதிகள் அமைந்து சைவ,

வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக அமைந்துள்ளது.

தல வரலாறு :

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு வந்த காலத்தில் வில்லியம் காரோ என்பவர்தான் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார்.

அம்பிகை வேதநாயகியின் பெருமையையும் அழகையும் மக்கள் வியந்து பேசுவதைக்
கண்ட காரோ தாமும் அம்பிகையைக் காண விரும்பினார்.

இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால் மதில் சுவரில் சாளரம் போன்று
மூன்று துளைகளைச் செய்து காரோ அதன் மூலம் அம்பிகையைக் காண வழி செய்தனர்.

காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினந்தோறும் கண்டு வழிபட்டு வந்தார்.

அந்தத் துளைகள் இன்றும் உள்ளன.

ஒரு முறை காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்த போது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப்
பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு விழித்து எழுந்த காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார்.

அடுத்த நிமிடமே காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து கீழே விழுந்தது.தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி அம்பிகைக்கு தந்தத்தால் ஆன

கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார்.

கோவிலின் அமைப்பு :

பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில்

இந்த கோவில் அமைந்துள்ளது.

கோவிலுக்கு இரண்டு வாயில்கள். கோவிலின் பிரதான கோபுரம்  வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் உடையதாக அமைந்துள்ளது.

இக்கோவிலின் தென்மேற்கு மூலையில் உள்ள தல விருட்சம் இலந்தை மரம் தனி சிறப்பு கொண்டது. வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக ஐதீகம்.

இங்கு தான் குபேரனுக்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக தரிசனம் தந்துள்ளார்.

கோவிலின் சிறப்பு :

வேதநாயகியின் சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சன்னிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சன்னிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சன்னிதியைக் கடந்து சென்றால்
இந்தக் கோவிலின் மூலவரான சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் உள்ள அமிர்தலிங்கேஸ்வரர் சன்னிதி சிறப்புடையதாகும்.

#பவானி #சங்கமேஸ்வரர் #அம்பிகை

 

Share this:

Write a Reply or Comment

nine − 7 =