உண்மையான திருநெல்வேலி சாப்பாட்டை சாப்பிட்ட மகிழ்ச்சி

இன்று (14/04/2022) மதியம் நாங்கள் நல்ல பசியுடன் இருந்ததால் நல்ல சுவையான சைவ உணவு வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க என்னுடைய வாகன ஓட்டுநர் திரு பரமசிவம் அவர்கள் சொன்னதன் பேரில் வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சரஸ்வதி பவான் ஹோட்டலில் உணவருந்த சென்றோம். நீண்ட நெடிய பயணத்திற்கு பிறகு நீண்ட நாளைக்குப் பிறகு அதுவும் தேடலுக்கு பிறகு உண்மையான திருநெல்வேலி சாப்பாட்டை சாப்பிட்ட மகிழ்ச்சியில் இந்த பதிவு. மதிய சைவ சாப்பாடு […]

விளக்கேற்றுத் திருமணம்

தமிழ்நாட்டில் திருநெல்வேலியை மையமாகக் கொண்ட கார்காத்த வேளாளர் என்கிற சமூகத்தில் விளக்கிடு கல்யாணம் (விளக்கேற்றுத் திருமணம் )என்று ஒரு வைபவம் உண்டு. திருமண விழாவைப் போல் மிகவும் சிறப்பாக இவ்விழா நடைபெறும். பெண் குழந்தையின் தாய்மாமன்/தாத்தா அப்பெண்ணின் கழுத்தில் வெள்ளிக் கம்பியில் தங்கமணிகள் பவளங்கள் 9 கோர்த்துள்ள குதச்சிமணி என்று அழைக்கப்படும் அணிகலனை அணிவிக்கும் சடங்குதான் விளக்கேற்றுத் திருமணம் எனப்படும். பெண் ருது ஆவதற்கு முன் அந்த பெண்ணின் 7 அல்லது 9 அல்லது 11 வயதில் […]

கீரனூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஆதீஸ்வரசுவாமி திருக்கோயில்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், கீரனூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஆதீஸ்வரசுவாமி திருக்கோயில் அருள்மிகு செல்வநாயகி அம்மன் திருக்கோயில் செல்வதற்கு இன்று ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. இந்த கோவில் கொங்கு மண்டலத்தின் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான, குறிப்பிட்ட கூட்டத்திற்கான கோவில்… நிறைய யோசித்து பார்த்துள்ளேன் கொங்கு மண்டலம் மட்டும் எல்லாவற்றிலும் எப்படி தமிழ்நாட்டில் சிறந்து விளங்குகின்றது என்று. அதற்கு ஒரே காரணம் ஆக நான் கண்டுபிடித்த விஷயம்: இன்றும் இந்துக்களாக உள்ள கொங்கு மண்டல மக்கள் அத்தனை பேரும் […]

சாரல் 6

சாரல் 6 மீண்டும் ஒரு நாய் கதை!!!!!! முகக் கவசம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்த நாம் இனி வாழ் நாள் முழுதும் முகக்கவசம் உடன் தான் வாழ்ந்தாக வேண்டும் போல. இயற்கையை சீரழித்த நமக்கு இந்த தண்டனை போதாது நிலைமை இப்படியே நீடித்தால் முக கவசம் ஊரடங்கு வாழ்வின் ஓர் அங்கமாக மாறியது போல இன்னும் என்னவெல்லாம் கட்டுப்பாடு வரப் போகின்றதோ என்பதை நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்த சக்தியே அறியும். மனிதனுக்கு முகக்கவசம் சானிடைசர் […]

சாரல் 3 பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சாரல் 3 பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்று (22 11 2021) பிறந்தநாள் காணும் எனது அருமை நண்பர் திரு அசன் முகமது ஜின்னா ( Tamil Nadu State Public Prosecutor) அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் இறை மார்க்கத்தில் சரணாகதியின் உச்சகட்டம் ஆண்டாள் என்றால் நான் இதுவரை கண்ட லௌகீக வாழ்க்கை முறையில் சரணாகதியின் உச்சகட்டம் ஜின்னா அவர்கள் வரம்பின்றி விளிம்பின்றி தன்னை நேசிப்பவர் மனிதனுக்குள் மனிதம் விதைப்பவர் எதிர்பார்ப்பில்லாத எளிமையான மனிதரான ஜின்னாவிற்கு […]

சாரல் #1

சாரல் 1 இன்றைய வாழ்க்கை சூழலில் கொரோனா பாதிப்பின் காரணமாக social distancing என்பது இன்றியமையாத அத்தியாவசியமான விஷயமாக போய்விட்டது அதன் காரணமாக விமானத்தில் செல்லும் முன் விமான பயணிகள் அமரும் இடத்தில் கூட நடுவில் ஒரு நாற்காலி காலியாக விட்டு தான் ஆட்கள் அமர வேண்டும். அப்படி அமர்ந்தால் கொரோனா பரவலுக்கு அது வித்திட்டு விடும் என்பதால் இது பிரமாதமான யோசனை என்று பாராட்ட வேண்டும் யோசனை கூறியவரை. ஆனால் விமானத்தில் பயணம் செய்யும்போது மட்டும் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by