ஸ்ரீ ஆண்டாளை அவள் அவதரித்த பூமியில், அவளுக்கு பிடித்த மாதத்தின் முதல் நாளான மார்கழி 1 – ம் தேதியன்று அவளை பார்ப்பது தானே பொருத்தமாக இருக்கும். வாருங்கள் வரும் புதன்கிழமை (16-12-2015) இரவு 7:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசிக்க. திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் ஆண்டாள் […]
ஸ்ரீ என்றும் அன்புடன் ஆண்டாளுக்கு அடுத்து எனக்கு, என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள் என சிலர் உண்டு. அதில் மிக, அதி முக்கியமானவர் என் நண்பர், சகோதரர் மண்ணச்சநல்லூர் திரு.திருகோவிந்தன் அவர்கள். திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த இவர் மிகப்பெரிய அளவில் தரமான முறையில் அரிசி வியாபாரம் செய்து கொண்டிருப்பவர். நான் ஆண்டாளுக்கு உழைத்ததை விட இவர் உழைத்த உழைப்பின் அளவு இமயமலை உயரம். அது எனக்கு மட்டும் புரிந்த உண்மை…. இவர் நல்ல மனிதர்; சிறந்த பண்பாளர்; […]
ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பு II – ன் ஐந்தாம் நாளான இன்று (19-07-2015) நேரடி கள ஆய்வு – க்கு சென்ற போது எடுத்த படங்கள்….
ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பு II – ல் நடந்த ஒரு சிறிய விஷயம் வாழ்க்கையை எப்படி நகர்த்த வேண்டும் என்ற பார்வையை உங்களுக்கு தரும் என நம்புகின்றேன். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஒருவரை வாஸ்து கற்க வந்தவர்களுக்காக பேச கூப்பிடுகின்றேன். வந்தவர் சாதாரணமானவர் அல்ல. பெரியாழ்வாரின் 225 – வது வம்சாவழி. வந்தவர் சும்மா வராமல் ஆண்டாளுக்கு சார்த்திய மாலை, கிளி மற்றும் பிரசாதத்தோடு வருகின்றார். பிரசாதமும், கிளியும், மாலையும் எனக்காக கொண்டு வரப்பட்டது […]
ஸ்ரீ சென்னை Le Royal Meridien – ல் வாஸ்து பயிற்சி வகுப்பு – II நடந்து கொண்டிருக்கும்போது எடுத்த படங்கள்….
ஸ்ரீ வாழ்க்கை முடியவே முடியாது என்கின்ற முடிவெடுத்து நிறைய பேர் சந்தோஷமாக வாழ்வதாக நடித்து கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் முடிந்து விடும் என்று தெரிந்தும் சந்தோஷமாக சிலபேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த சிலரில் நானும் ஒருவன். எதிர்பார்ப்பு நிறைந்த உலகம் ஏமாற்றத்திற்கு குறைவில்லா உலகம் ஏற்றத்திற்கு என்றும் பஞ்சமில்லா உலகம் ஏறிய பின் ஏற்றிய ஏணியை எட்டி உதைக்கும் உலகம் நின்ற ஏணிக்கு நிற்பதும் ஒன்று தான்… படுத்திருப்பதும் ஒன்று தான் என்ற எண்ணம் இருப்பதை […]
ஸ்ரீ கடவுள் என்று கல்லை வணங்கி நேரத்தை விரயம் செய்கின்றோம் என்று நம்மை பார்த்து நாத்திகர்கள் எப்போதும் முன்வைக்கும் வாதத்திற்கு என்னுடைய பதில்…. ஆம்…. நாத்திகர்கள் சொல்வது உண்மைதான்…. கடவுளை வெறும் கல்லாக பார்க்கும் அனைவருமே அவர்கள் நேரத்தை விரயம் செய்கின்றார்கள் என்பதில் எனக்கும் எந்த வித மாற்று கருத்தோ,அப்பிப்ராய பேதமோ இல்லை. கல்லை கடவுளாக, தோழியாக, தோழனாக, தாயாக, தந்தையாக, அண்ணனாக, தம்பியாக, தங்கையாக, அக்காவாக, மனைவியாக, கணவனாக, ஆசிரியராக, தாத்தாவாக, பாட்டியாக, மாமாவாக, அத்தையாக […]
ஸ்ரீ மே 22 அன்று நடைபெற இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக மே 20 அன்று திருச்சி, மதுரை வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல இருக்கின்றேன். போகும் வழியில் பழைய வாஸ்து வாடிக்கையாளர்கள் (Old Clients) அவர்களின் தேவைக்காக என்னை நான் இருக்கும் இடத்திற்கு வந்து சந்திக்க விரும்பினால் திரு.செந்தூர் சுப்பிரமணியன் @ +91 99622 94600 அவர்களையோ அல்லது திரு.அபுதாலிப் @ +91 98843 94600 அவர்களையோ தொடர்பு கொள்ளவும். திருவே தஞ்சம்; திருவரங்கனே […]
ஸ்ரீ வேடிக்கையான கதை ஒன்றை நான் Business School – ல் படிக்கும் போது விரிவுரையாளர் சொல்ல கேட்டிருக்கின்றேன். அந்த கதை….. ஒருவன் கையில் ரூ.100/- மட்டுமே இருந்தது. அவனுக்கோ 5 Star ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என ஆசை. 5 Star ஹோட்டலில் ஒரு வேளை சாப்பாட்டின் விலை ரூ.1700/- என கேட்டு விசாரித்து கொண்டான். பணம் இல்லாவிட்டாலும் தைரியத்தை வரவழைத்து கொண்டு மூச்சு முட்டும் அளவிற்கு சாப்பிட்டு தீர்த்தான். சாப்பிட்டதற்கு கொடுக்க பணம் தன்னிடம் […]