ஒரு இடத்தில் கட்டப்படும் கட்டிடம் அந்த இடத்தின் எல்லை வரை கட்டலாமா?

ஒரு இடத்தில் கட்டிடம் கட்டும் போது அந்த இடத்தின் எல்லை வரை கட்டிடம் கட்டக்கூடாது. அதாவது அந்த இடத்தின் நான்கு புறமும் மதில் சுவர் அமைத்து, மதில் சுவரின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியை ஒட்டியவாறு கட்டிடம் கட்ட வேண்டும். ஒரு இடத்தின் மதில் சுவருக்கும், கட்டிடத்தின் தாய் சுவருக்கும் உள்ள இடைவெளியானது மேற்கு பகுதியை விட கிழக்கு பகுதியில் அதிகமாகவும், தெற்கு பகுதியை விட வடக்கு பகுதியில் அதிகமாகவும் இருக்க வேண்டும்.

ஒரு வீட்டின் தாய் சுவரின் முனைகள் துண்டித்து(உடைந்து) இருக்கலாமா?

ஒரு வீட்டின் தாய் சுவரில் எந்த முனையும் துண்டிக்கப்படாமலும், உடையாமலும் இருக்க வேண்டும். மேலே உள்ள படத்தில் இரண்டு இடங்களில் தாய் சுவர் முனைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இது தவறு.

Open chat
1
Hello,
Can I help You?
Powered by