தேர்தல் நாள் அன்று திரை அரங்குகள் மூடப்படும்…..

தேர்தல் நாள் அன்று திரை அரங்குகள் மூடப்படும்…..

நான் மற்றும் என் நண்பர்களான மன்னார்குடி திரு.R.S.செந்தில்குமார் வாண்டையார், சிதம்பரம் திரு.T.C.ராஜ்குமார், இராமநாதபுரம் திரு.மகேந்திர பாண்டியன் ஆகியோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையர், இந்திய துணைத் தலைமை தேர்தல் ஆணையர்கள் மற்றும் தமிழக தேர்தல் ஆணையரை 11-04-2014 அன்று கிண்டி ITC கிராண்ட் சோழா ஹோட்டலில் 20 நிமிடம் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது…

அந்த சமயத்தில், தமிழக பாராளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு நாளான 24-04-2014 அன்று வாக்குபதிவு நன்கு நடக்க ஏதுவாக அனைத்து திரை அரங்குகளும் மாலை 6 மணி வரை மூடப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். காரணம் சினிமாவுக்கு அடிமையான நம் தமிழ்நாட்டு மக்கள் தேர்தலுக்கான விடுமுறையை தேர்தலில் வாக்களிக்க பயன்படுத்தாமல் திரைப்படம் பார்க்க போய் விடுகிறார்கள் என்பதை ஆதாரத்துடன் எடுத்து கூறினோம். எங்கள் கோரிக்கையில் உள்ள உண்மையை புரிந்து கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் இந்தியாவிலயே முதல் முறையாக தமிழக பாராளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு நாளான 24-04-2014 அன்று வாக்குபதிவு நன்கு நடக்க ஏதுவாக அனைத்து திரை அரங்குகளும் மாலை 6 மணி வரை மூடப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்து உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எங்கள் நன்றி… நன்றி… நன்றி….
ஆண்டாள் பி.சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

two + 7 =