APC Birthday

ஸ்ரீ

DSC_0151

பிறந்த நாள் என்றாலே அனைவருக்கும் ஒருவித சந்தோஷம் இருக்கும். நான் மட்டும் எப்படி இந்த விதிக்கு விதிவிலக்காக இருக்க முடியும்…

எத்தனையோ பிறந்த நாட்கள் மதுவோடு கழிந்து இருக்கின்றது.

எத்தனையோ பிறந்த நாட்கள் மற்றவர்களின் மறதியோடு கடந்து சென்று இருக்கின்றது.

எத்தனையோ பிறந்த நாட்கள் அடுத்த பிறந்த நாளுக்கு இருப்போமா என கழிந்து இருக்கின்றது

இவை அத்தனையும் ஒரு பக்கம் இருந்தாலும்,பிப்ரவரி 28, 2016 ஐ மட்டும் மறக்கவே முடியாத என்னால் எந்தவிதத்திலும் மறந்தும் இருந்து விட முடியாத அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாக அமைந்துவிட்டது – ஆண்டாள் அருளளால்….

VPT – IV சகோதர, சகோதரிகள் திரு.வெங்கடேசன், திரு.ரவி, திருமதி.கனகலட்சுமி, திரு.சரவணன், திரு.ராஜப்பா, திரு.விஸ்வநாதன், திரு.ரமேஷ், செல்வி.அணிதாஸ்ரீ, திருமதி.அம்பிகா, செல்வி.ஸ்ருஜனா, திருமதி.ஜெயந்தி, திரு.சந்திரசேகர், திரு.முத்துசாமி, திரு.நம்பிராஜ், திரு.அரங்கநாதஸ்ரீ, திரு.வெங்கடேஸ்வரன், திரு.ரவிக்குமார், திருமதி.சிந்தனா, திரு.ரெஜின் அருள் ஆகியோருடன் அட்டகாசமாக மதுரை Heritage Hotel – லில் புல் தரையின் மேல் ஒருவித கதகதப்பான இரவில் புத்தம் புது உறவுகளுடன் புதியதாக பிறந்த வானம்பாடி முதன்முதலாக சிறகடித்து பறந்தது போல் ஓர் உணர்வுடன் கொண்டாடப்பட்டது – கூடவே என் ஆருயிர் நண்பர்கள் சேலம் திரு.ரங்கநாதன், திரு.நாகராஜன், திரு.சரவணன் மற்றும் திரு.சேகர் இருந்தது மேலும் சிறப்பாகி போனது.

பிப்ரவரி 28, 2016 காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருமஞ்சனமும், அலங்காரமும் ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார்  – க்கு பார்த்த பின் அய்யங்கார் கையில் செய்யப்பட்ட மடப்பள்ளி புளியோதரையும், தயிர்சாதமும் 7 star deluxe hotel – லில் கூட கொடுக்க முடியாத சுவையோடு ஆண்டாள் ஆசிர்வாதத்துடன் பரிமாறப்பட்டு என்னை ஆனந்தத்தின் உச்சகட்டத்தை தொட வைத்தது.

என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி கொடுத்த அனைவருக்கும் நன்றி…

அந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்…

DSC_0153 DSC_0155 DSC_0156 DSC_0159 DSC_0160 DSC_0161 DSC_0162 DSC_0164 DSC_0167 DSC_0168 DSC_0169 DSC_0175 DSC_0178 DSC_0179 DSC_0180 DSC_0187 DSC_0194 DSC_0195 DSC_0198 DSC_0201 DSC_0210 DSC_0227

DSC_0230 DSC_0234 DSC_0246 DSC_0256 DSC_0264 DSC_0271 DSC_0275 DSC_0277 DSC_0278 DSC_0281 DSC_0282 DSC_0284 DSC_0285 DSC_0286 DSC_0289 DSC_0291 DSC_0294

திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்;
தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

four × five =