அருங்கரை அம்மன் திருக்கோவில்:

அருங்கரை அம்மன் திருக்கோவில்: கோவில் பெயர் : அருள்மிகு அருங்கரை அம்மன் திருக்கோவில். அம்மனின் பெயர் : அருங்கரை அம்மன் தல விருட்சம்   : ஊஞ்சல்மரம் கோவில் சிறப்பு :  500 வருடங்களுக்கு முன் பழமையானது. சோழர்களால் கட்டப்பட்டது இது 129 வது தேவாரத்தலம் ஆகும். அம்பாள் கோவில்களில் வழக்கமாக தரப்படும் மஞ்சள், குங்கும பிரசாதமும் இங்கு தரப்படுவதில்லை.  நைவேத்தியம் தயாரிக்கும் அடுப்பிலுள்ள சாம்பலையே தருகின்றனர். இது மருத்துவத்தன்மை வாய்ந்தது என்கிறார்கள்.  கோவில் அருகே ஓடும் அமராவதி […]

கந்தசுவாமி திருக்கோவில்: 

கந்தசுவாமி திருக்கோவில்:  400 ஆண்டுகளுக்கு முன்னரே இந்து கோவில் ஒன்றில் முஸ்லீம் மன்னர் ஒருவரின் சிலை பொறிக்கப்பட்டு மத நல்லிணக்கத்திற்கு ஆதாரமாக விளங்கி மேலும் தாரகனை வதம் செய்து முருகன் குடிகொண்ட கந்தசுவாமி திருக்கோவிலானது காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் அமைந்துள்ளது. மூலவர் : முருகன். அம்மன் : துர்கை, புண்ணிய காருண்ய அம்மன். தல விருட்சம் : வன்னி மரம். பழமை : 400 ஆண்டுகளுக்கு முன். ஊர் : திருப்போரூர். மாவட்டம் : காஞ்சிபுரம். தல […]

லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில் :

லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில் : சின்னமனூர் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.  ராணிமங்கம்மாளின் பாதுகாப்பாளராக இருந்த சின்னமநாயக்கர் என்பவரின் பெயரால் அமையப்பெற்ற சின்னமனூரில் பெருமாள் அருகில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் சிறப்பு வாய்ந்த லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. மூலவர் : லட்சுமிநாராயணர். அம்மன் : ஸ்ரீதேவி, பூதேவி. தல விருட்சம் : மகிழம். தீர்த்தம் : சுரபி நதி. பழமை : 500 வருடங்களுக்கு முன். ஊர் : சின்னமனூர். […]

வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோவில்:

வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோவில்: வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோவில்: மூலவர் – முனியப்பன் பழமை – 500 வருடங்களுக்கு முன் ஊர் – வெண்ணங்கொடி மாவட்டம் – சேலம் மாநிலம் – தமிழ்நாடு அந்தகாசுரன் என்பவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தான். அவனிடமிருந்து தங்களைக்  காக்கும்படி அன்னை பராசக்தியை தேவர்கள் வேண்டினர்.  அவள் அவர்களைக் காப்பதற்காக காத்தாயம்மன் என்ற பெயரில் தோன்றினாள். அவள் லாடமுனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி. சடைமுனி என்ற ஏழு புதல்வர்களை உருவாக்கினாள். […]

தாருகாவனேஸ்வரர் கோயில்

தாருகாவனேஸ்வரர் கோயில் : அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் குளித்தலை வட்டத்தில் உள்ள திருப்பராய்த்துறை கிராமத்தில் அமைந்துள்ளது. இறைவன் பிட்சாடனராய் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள மூன்றாவது சிவத்தலமாகும். கோயில் தகவல்கள்: மூலவர்:பராய்த்துறைநாதர், தாருகாவனேஸ்வரர் உற்சவர்:பராய்த்துறைப் பரமேஸ்வரன் தாயார்:பசும்பொன் மயிலாம்பிகை உற்சவர் தாயார்:ஹேமவர்ணாம்பாள் தல விருட்சம்:பராய் மரம் தீர்த்தம்:அகண்ட காவேரி ஆகமம்:சிவாமம் […]

நாவலடி கருப்பசாமி திருக்கோவில்

நாவலடி கருப்பசாமி திருக்கோவில் கருப்பசாமி வழிபாடு தமிழ்நாடு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி ஒரு கிராம காவல் தெய்வமாவார். இவரை கருப்பசாமி என்றும் #கருப்பன் என்றும் அழைப்பதுண்டு.  இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். மூலவர் : கருப்பசாமி. உற்சவர் : நாவலடியான். அம்மன் : செல்லாண்டியம்மன். தல விருட்சம் : நாவல். தீர்த்தம் : காவிரி. பழமை : 500-1000 வருடங்களுக்கு முன். ஊர் : மோகனூர். மாவட்டம் : நாமக்கல். தல […]

ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில்

ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில்: இளையான்குடி 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் அவதரித்து முக்தி அடைந்த தலம்.  இங்கு இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோவில் எனும் சிவன் கோவில் அமைந்துள்ளது. மூலவர் : ராஜேந்திர சோழீஸ்வரர். உற்சவர் : சோமாஸ்கந்தர். அம்மன் : ஞானாம்பிகை. தல விருட்சம் : வில்வம். தீர்த்தம் : தெய்வபுஷ்கரணி. பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன். மாவட்டம் : சிவகங்கை தல வரலாறு : மகரிஷி ஒருவரிடம் பெற்ற சாபத்திற்கு விமோசனம் […]

பாசுபதேஸ்வரர் திருக்கோவில்: 

பாசுபதேஸ்வரர் திருக்கோவில்:  சாஸ்திரப்படி கோவில் எப்படி அமைக்க வேண்டும் என்று உள்ளதோ அதன்படி அமைக்கப்பட்ட கோவில் இதுவாகும். பல்லவ அரசர்களால் செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோவில் 1914ல் கானாடுகாத்தான் பெத்த பெருமாள் செட்டியாரால் கருங்கற்களால் செப்பனிடப்பட்ட பாசுபதேஸ்வரர் கோவில் கடலூர் மாவட்டம் திருவேட்களம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். மூலவர் : பாசுபதேஸ்வரர். தாயார் : சத்குணாம்பாள் நல்லநாயகி. தல விருட்சம் : மூங்கில். தீர்த்தம் : கிருபா தீர்த்தம். ஆகமம் : காமிய ஆகமம். பழமை […]

பொய்யாளம்மன் திருக்கோவில்: 

பொய்யாளம்மன் திருக்கோவில்:  புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் இருந்து 8 கி.மீ.தொலைவில் உள்ள சிற்றூர் ஒக்கூர். இங்குள்ள பொய்யாளம்மன் கோவில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது.  ஒக்கூர் மறவநேந்தல் பேராவலல் தச்சமல்லி நரிக்குடி ஆலத்தி வயல் உட்பட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்கள் பொய்யாளம்மனை குல தெய்வமாக வழிபடுகின்றனர். மூலவர் : பொய்யாளம்மன். பழமை : 500 வருடங்களுக்கு முன். ஊர் : ஒக்கூர். மாவட்டம் : புதுக்கோட்டை. தல வரலாறு : இப்பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு […]

பொன்னர் சங்கர்:

பொன்னர் சங்கர்: அண்ணன்மார் சுவாமிகளின் ஆலயங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது வீரப்பூர் திருத்தலம். இவ்வழிபாட்டுக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவது பொன்னர்-சங்கர் சகோதரர்களின் வரலாறும், அவ்வரலாற்றோடு இணைந்த மக்களின் பாரம்பரியத் தொடர்பும் தான் காரணமாக அமைகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பெரியக்காண்டியம்மன் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் தலம்தான் வீரப்பூர். இங்கு பெரியக்காண்டியம்மன் கோயிலுக்கு அருகில் அண்ணன்மார் சுவாமிகள் எனப்படும் பொன்னர்- சங்கர் கோவில் உள்ளது. அருகில் “நான் உங்களுடனேயே இருக்கிறேன்; பிறகு என்ன […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by