தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில்:

தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில்: தேவர்கள் படைக்கு தலைமையேற்று சம்ஹhரத்திற்கு சென்றதால் இத்தலத்து சிவன், தெய்வநாயகேஸ்வரர் என்றும், அரம்பையர்களுக்கு அருளியதால், அரம்பேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இதனால், அரம்பையங்கோட்டூர் எனப்பட்ட இத்தலம் காலப்போக்கில் எலும்பியங்கோட்டூர் என்று மருவியது. தட்சனால் சாபம் பெற்ற சந்திரன், இங்குள்ள மல்லிகாபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி சென்றுள்ளார். இதில் நீராடி சுவாமியை வணங்கினால் மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், தீண்டாத்திருமேனியான சிவன், கொன்றை மலரின் இதழைப்போன்று காட்சி தருகிறார். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by