March 04 2022 0Comment

திருக்கோஷ்டியூர் தங்க விமானம் திருப்பணி

திருக்கோஷ்டியூர் தங்க விமானம் திருப்பணி 

திருக்கோஷ்டியூர், மார்ச் 4 திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோயில் தங்க விமானத் திருப்பணிக்கு தமிழ்நாடு ஸ்ரீ ஆண்டாள் பேரவை சார்பில் 3ம் கட்டமாக 600 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.
திருக்கோஷ்டியூர் பூமி நீளா சமேத சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் உள்ள அஷ்டாங்க விமானத்திற்கு தங்க திருப்பணி நடைபெற்று வருகிறது. 3448 சதுர அடிபரப்பிலான இந்த விமானத்திற்கு தங்கத் தகடு வேய சதுர அடிக்கு 22 கிராம் தங்கம் தேவைப்படுகிறது.இதற்காக சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம்,சௌமியநாராயண பெருமாள் சாரிடபிள் டிரஸ்ட், கோவில் கிராமத்தினர் இணைந்து திருப்பணிக்கு உபயதாரர்களிடமிருந்து தங்கம் சேகரித்து வருகின்றனர்.
திருப்பணிக்காக தமிழ்நாடு ஸ்ரீ ஆண்டாள் பேரவை சார்பில் தொடர்ந்து தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று மதுரையில்(02.03.2022) நடந்த விழாவில் டாக்டர் ஆண்டாள் பி.சொக்கலிங்கம் தலைமையில்,மாநில செயலாளர் நாகராஜன், ஒருங்கிணைப்பாளர் சாய்சிவா, பேரவை நிர்வாகிகள் பாண்டிய ராஜா, திருமலைராஜா, ராஜ்பிரகாஷ் முன்னிலை யில் 600 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.
திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமிகள், பட்டாச்சார்யர்கள் ஸ்ரீராம், பரசுராம், பிரசன்னா, ஸ்ரீவில்லிபுத்துார் சுதர்சன் சுவாமிகள் தலைவர் ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
Share this:

Write a Reply or Comment

five × one =