December 25 2020 0Comment

திருப்பாவை பாடல் 05:

திருப்பாவை

பாடல் 05

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

பொருள் :

மாயக்கலையில் வல்லவனாகவும், நிலைப்பெற்ற வடமதுரையில் பிறந்த மகனை யமுனை துறையில் ஆடிப்பாடி விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேட்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிற்றை கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனுமான எங்கள் தாமோதரனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் நிறுத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல் காணாமல் போய்விடும்.

Source:web 

Share this:

Write a Reply or Comment

five × 5 =