January 10 2021 0Comment

திருப்பாவை பாடல் 22:

திருப்பாவை பாடல் 22:

(பாவங்களை நீக்குக எனல்) அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம் :

எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா? என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் நீ பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத் சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் வந்து அணுகியுள்ளோம். எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும், தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் ஒரு சேர உதித்தது போல, அந்த அழகிய உன் இரு விழிகளைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும், சாபங்களும் தீர்ந்து விடுமே! மார்கழியில் திருப்பாவை பாடல்களை பாடி பரந்தாமனின் அருளை பெற்றிடுவோம் வாருங்கள்…!!

Source:web

Share this:

Write a Reply or Comment

13 − 10 =