ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

அனைவருக்கும் இனிய வணக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவிலுடன் இணைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவிலில் வைத்து தான் திரு ஆடிப் பூர உற்சவத்தின் ஏழாம் நாள் திருவிழா சயன சேவை நடைபெறும். இத்தகைய சிறப்பு வாய்ந்த சயன சேவை மண்டபத்தின் மேற்கூறையில் தட்டோடுகள் பதிக்கும் திருப்பணி தற்போது ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் சார்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே ஆண்டாள் கோவிலின் தங்க விமான திருப்பணியில் கலந்து கொண்டு தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தவறியவர்கள், நம் தாயாரின் சயன சேவை மண்டப திருப்பணியில் கலந்து கொண்டு தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அதற்கான மொத்த செலவுத்தொகை ரூ13, 26,000/
இதில் இதுவரை நண்பர்கள் வழங்கிய நன்கொடையான ரூ 7,00,000 பராமரிப்பு பணிக்கு என இந்தப் பணியை செவ்வனே செய்து வரும் ஒப்பந்ததாரிடம் வழங்கப்பட்டுள்ளது
இந்த பணி நல்லவிதமாக நடந்தேற இன்னும் ரூ 6,26,000 / தேவைப்படுகிறது
எனவே அன்பர்கள், நண்பர்கள் ஸ்ரீ ஆண்டாளுக்கு செய்யும் சேவையாக இந்த சேவையை நினைத்து இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இது சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் கோவில்பட்டியை சேர்ந்த எங்கள் குழு உறுப்பினர் திரு. வெங்கட் (செல் பேசி எண் 9952730703) அவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
என்றும் அன்புடன்
ஶ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை
Share this:

Write a Reply or Comment

three + eleven =