இராஜபதியும், இயற்கையின் சதியும்: –

ஸ்ரீ வேடிக்கையான கதை ஒன்றை நான் Business School – ல் படிக்கும் போது விரிவுரையாளர் சொல்ல கேட்டிருக்கின்றேன். அந்த கதை….. ஒருவன் கையில் ரூ.100/- மட்டுமே இருந்தது. அவனுக்கோ 5 Star ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என ஆசை. 5 Star ஹோட்டலில் ஒரு வேளை சாப்பாட்டின் விலை ரூ.1700/- என கேட்டு விசாரித்து கொண்டான். பணம் இல்லாவிட்டாலும் தைரியத்தை வரவழைத்து கொண்டு மூச்சு முட்டும் அளவிற்கு சாப்பிட்டு தீர்த்தான். சாப்பிட்டதற்கு கொடுக்க பணம் தன்னிடம் […]

வாஸ்து – எனக்கு கொடுத்த அற்புத வரங்கள் – 1

ஸ்ரீ சபரி தன்னை தாயாக்கி கடவுளை குழந்தையாக பார்த்தாள்… மீரா தன்னை காதலியாக்கி கடவுளை காதலனாக பார்த்தாள்… ஆண்டாள் மட்டும் தான் தன்னை மனைவியாக்கி கடவுளை கணவனாக பார்த்தாள்… அந்த வகையில் அரங்கனையே தனதாக்கி கொண்ட ஆண்டாளுடைய அன்பின் அளவு அளவிடமுடியாதது. இதனால் தான் என்னவோ ஒவ்வொரு முறை ஆண்டாள் தாயாரை பார்க்கும் போதும் பார்க்கும் அந்த நொடியே இறப்பை தழுவ வேண்டும் என்கின்ற எண்ணம் என் மனம் முழுவதும் வியாபிக்கும். ஆண்டாளை தரிசனம் செய்யும் அந்நேரத்தில் […]

வாஸ்து – விடை தெரியா மர்மங்கள் – 4

ஸ்ரீ சென்னை மாநகரில் மிகப் பெரிய பணக்காரர்களுக்கு என்று அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டி கொடுக்கும் நிறுவனங்களில் முதன்மையான நிறுவனத்தின் உரிமையாளர் எனக்கு இருக்க கூடிய 1000 மிகப்பெரிய பணக்கார வாடிக்கையாளர்களில் ஒருவர். சமீபத்தில் கட்டுமானம் நடந்துகொண்டிருக்கும் அவருடைய 5 கட்டிடங்களுக்கு வாஸ்து ஆலோசனை வழங்க சென்றிருந்தேன். அதில் ஒரு மனையில் உள்ள வீடுகள் எல்லாம் 5000 சதுர அடி விஸ்தீரணம் கொண்டது. ஒவ்வொரு வீடும் பணத்திற்கு வஞ்சனை இல்லாமல் அற்புதமாக வடிமைக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தது. அந்த இடத்தை பார்வையிட்டுக் […]

வாஸ்து – விடை தெரியா மர்மங்கள் – 3

ஸ்ரீ எனக்கு நினைவு தெரிந்து என்னுடைய வாஸ்து அனுபவத்தில் கீழ்கண்ட Dialogue – ஐ ஏறத்தாழ நான் வாஸ்து பார்த்த மக்களில் 40% பேர் சொல்லி கேட்டிருக்கின்றேன். “உங்களுக்கு பூர்வீகம் ஆகாது. தயவுசெய்து வேறு இடத்திற்கு போய் விடுங்கள் என எங்கள் ஜோதிடர் சொல்லி இருக்கின்றார். அதனால் தான் வீடு மாறி இந்த வீட்டில் இருக்கின்றோம்”. ஜோதிடர் பூர்வீகம் ஆகாது என்று சொன்னவர்களின் பூர்வீக வீட்டை ஆராய்ந்து பார்த்ததில் அந்த வீடு பெரிய வாஸ்து தவறுகளுடன் தான் […]

நானும் ஆசிரியை ஆலிசும்: –

ஸ்ரீ நான் இதுவரை இல்லாத அளவிற்கு நெகிழ்ந்து போன நாள் 11-04-2015. காரணம் அன்று தான் எனக்கு மிக, மிக பிடித்த என் ஆலிஸ் டீச்சரை 37 வருடங்களுக்கு பிறகு பார்த்தேன். எனக்கு அவர்கள் 1977 – ல் இரண்டாம் வகுப்பு வகுப்பு ஆசிரியையாக இருந்தார். ஒருமுறை Very Good என்று சொல்லியவாறே கணக்கு பாடத்தில் 20/20 மதிப்பெண் வாங்கி இருக்கிறாய் என்று சொல்லி நோட்டு புத்தகத்தை அவர் என்னிடம் கொடுத்த போது நான் அடைந்த சந்தோஷத்திற்கு […]

வாஸ்து பயிற்சி வகுப்பு – கடிதம் 5 | Vastu Practitioner Training – Letter 5

ஸ்ரீ Vastu Practitioner Training – முதல் பயிற்சி வகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் முழு பட்டியல்: – 1. Dr.Sanjeev, Chennai 2. Mr.Rajkumar, Chennai 3. Mr.Subramanian, Chennai 4. Mr.Karthikeyan, Thiruvannamalai 5. Mr.Vijay, Thiruvannamalai 6. Mr.Ramasamy, Chenji 7. Mr.Amirthalingam, Dharmapuri 8. Mr.Veeramani, Dharmapuri 9. Mr.Selvakumar, Dharmapuri 10. Mr.Kumar, Dharmapuri 11. Mr.Srinivasan, Hosur 12. Mr.Anbalagan, Salem 13. Mr.Palaniyappan, Salem 14. Mr.Velusamy, Namakkal 15. […]

திருப்பதி பயணம்:-

ஸ்ரீ இன்று தீடிரென்று திருப்பதி பெருமாளை சந்ததிக்க வருமாறு ஓர் அழைப்பு. அழைத்தவரோ சாதாரணமானவர் அல்ல. ஏறத்தாழ 12 வருடங்களுக்கு பிறகு திருப்பதி மலைக்கு பயணம் மேற்கொள்கின்றேன். ஆண்டாளை தவிர வைணவம் சம்பந்தப்பட்ட வேறு எந்த இடத்திற்கும் போகாது இருந்த நான் ஏன் இன்று பெருமாளை சந்திக்க செல்கின்றேன் என்பதை விபரமாக பின் தெரிவிக்கின்றேன். ஆதலால் என்னை இன்று தொடர்பு கொள்ள நினைப்பவர்கள் நண்பர் திரு.சுப்பிரமணியன் அவர்களை  +91 99622 94600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் […]

வாஸ்து – விடை தெரியா மர்மங்கள் – II

ஸ்ரீ என்னுடைய நல்ல நண்பர் மூலம் அறிமுகமாகின்றார் மிக பெரிய அதிகாரம் பொருந்திய நபர்.. அவருக்கு நிறைய பிரச்சினைகள். என்னை அந்த பெரிய அதிகாரம் பொருந்திய நபருக்கு வாஸ்து பார்ப்பதற்காக அழைத்து போனார் என் நண்பர். பொதுவாக வாஸ்துவில் நம்பிக்கை இல்லாத அவருக்கு என்னைப் பார்த்தபின் ரொம்ப பிடித்து விட்டது. தயக்கத்துடன் என்னை வரவழைத்து வாஸ்து பார்த்தவர் நானே எதிர்பார்க்காத விதமாக, நான் சரி செய்ய சொன்ன அத்தனை விஷயங்களையும்  செய்து முடித்து விட்டார் – ஒன்றே […]

வாஸ்து – விடை தெரியா மர்மங்கள் – 1

ஸ்ரீ வட ஆற்காடு – திருப்பத்தூரில் வாஸ்து பிதாமகன்களான திரு.பிரம்மானந்தம் ரெட்டி அவர்களும், திரு.திருப்பதி ரெட்டி அவர்களும் வெவ்வேறு தருணங்களில் ஆலோசனை கொடுத்து கட்டிய வீடு அதன் வீட்டு உரிமையாளருக்கு  அது கட்டப்பட்ட சில காலங்களுக்கு உள்ளாகவே பிரச்சினைகளை அதிகம் கொடுத்ததால் “என் மேல் நம்பிக்கை வைத்து என்னை வாஸ்து பார்க்க“ அழைக்கின்றார். அவருக்காக வாஸ்து பிதாமகன்கள் கட்டிய வீட்டை பார்ப்பதற்கு நானும்  சென்றேன் பார்த்தேன். பிரமாண்டமான வீடு, அற்புதமான வடிவமைப்பு,  விதிகள் துல்லியமாக பின்பற்றப்பட்டு கட்டப்பட்ட […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by