வரதராஜப்பெருமாள் கோயில்:

திருமணிக்கூடம் வரதராஜப்பெருமாள் கோயில்: மூலவர் – வரதராஜப்பெருமாள் ( கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்) தாயார் – திருமாமகள் நாச்சியார்,(ஸ்ரீதேவி) தீர்த்தம் – சந்திர புஷ்கரிணி பழமை – 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர் – திருமணிக்கூடம் மாவட்டம் – நாகப்பட்டினம் மாநிலம் – தமிழ்நாடு தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள்.  27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான்.  ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த […]

திருத்தெற்றியம்பலம்:

திருத்தெற்றியம்பலம்: திருத்தெற்றியம்பலம் எனப்படும் பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.    திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூருக்கருகில் அமைந்துள்ளது.    இக்கோயில் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. 108 வைணவ திருத் தலங்களில் இத்தலம் ஒன்றிற்கு மட்டுமே அம்பலம் என்னும் சொல் வழங்கப்படுகிறது.   திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் பாடல்பெற்றது இக்கோயில்.    மணவாள மாமுனிகள் இங்கு வந்து சென்றுள்ளார். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் தை அமாவாசைக்கு […]

திருச்செம்பொன் செய்கோயில்

திருச்செம்பொன் செய்கோயில் திருத்தெற்றியம்பலம் செங்கண்மால் திருக்கோயில் திருத்தெற்றியம்பலம் எனப்படும் பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூருக்கருகில் அமைந்துள்ளது. இக்கோயில் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. 108 வைணவ திருத் தலங்களில் இத்தலம் ஒன்றிற்கு மட்டுமே அம்பலம் என்னும் சொல் வழங்கப்படுகிறது. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் பாடல்பெற்றது இக்கோயில். மணவாள மாமுனிகள் இங்கு வந்து சென்றுள்ளார். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் தை அமாவாசைக்கு […]

திருவண்புருடோத்தமம்:

திருவண்புருடோத்தமம்: திருவண்புருடோத்தமம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் அமைந்துள்ளது.   பெயர்: திருவண்புருடோத்தமம் அமைவு:திருநாங்கூர்   #பெயர் விளக்கம் :   இறைவன் பெயர் புருடோத்தமன். தமிழ்நாட்டில் உள்ள வைணவத் திருத்தலங்களில் புருடோத்தமன் (புருஷோத்தமன்) என்ற பெயரில் இறைவன் எழுந்தருளியிருப்பது இங்கு மட்டுமே ஆகும்.    இவ்விறைவனின் வள்ளல் தன்மையை உயர்வுபடுத்திக் காட்ட வண் புருடோத்தமன் என அழைக்கப்படுகிறார். எனவே இத்தலம் […]

முருகப்பெருமானை மகனாகக் கொண்ட பெண் சித்தர்:

முருகப்பெருமானை மகனாகக் கொண்ட பெண் சித்தர்: திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அழகுடன் காட்சியளிக்கும் அற்புதமான இடம்தான் ‘#பண்பொழி’.  இங்குள்ள திருமலை குமரன், மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கும் அற்புதத் தலைவன். பெரும்பாலுமே தெய்வத்தினை தனது தந்தையாக, தாயாக போற்றி வணங்குவது தான் வழக்கம்.  ஆனால் திருமலை குமரனை, தனது குழந்தையாக எண்ணி, நாள்தோறும், ஏன் நாழிகை தோறும் அவருக்கு தொண்டு செய்து, பல திருப்பணிகளை செய்து நற்பேறு பெற்றவர், சிவகாமி பரதேசியம்மாள்.  பண்பொழி […]

திருத்தேவனார்த் தொகை (திருநாங்கூர்)

திருத்தேவனார்த் தொகை (திருநாங்கூர்):      போதலர்ந்த பொழில் சோலைப்           புறமெங்கும் பொறு திறைகள்      தாதுதிர வந்தலைக்கும்           தட மண்ணி தென்கரைமேல்      மாதவன் றானுறையுமிடம்           வயல் நாங்கை வரிவண்டு      தேதென வென்றிசை பாடும்           திருத்தேவனார்த் தொகையே – (1248)   […]

திருஅரிமேய விண்ணகரம்:

திருஅரிமேய விண்ணகரம்:   அல்லது குடமாடு கூத்தன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.  #திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் அமைந்துள்ளது. #கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆடிய இறைவன் என்பதால் குடமாடு கூத்தன் என்ற பெயர். உதங்க முனிவர் இறைவனைக் குறித்து தவம் புரிந்து, கோபால கண்ணனாக இத்தலத்தில் பெருமாளைத் தரிசித்ததாக ஒரு வரலாறும் உண்டு.  தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவைக்கு இவரும் […]

சாளக்கிராமம்

சாளக்கிராமம்: சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல் ஆகும்.  இது இந்துக்களால் #திருமாலின் அருவத் தோற்றமாகக் கண்ணனை வழிபடப்படும் சிறப்புக் கல் இதுவாகும்.  இந்து சமயம் பெரும்பாலும் உருவ வழிபாட்டைக் கொண்டிருந்தாலும் சிவனை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவதுபோல வைணவர்கள் திருமாலை சாளக்கிராமக் கற்களில் வழிபடுகின்றனர். இந்தப் புனிதக் கற்கள் நேபாளத்தின் முக்திநாத் பகுதியில் கண்டகி ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன.  இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இவை நெடுங்காலமாக […]

திருவைகுந்த விண்ணகரம்

31.திருவைகுந்த விண்ணகரம்: திருவைகுந்த விண்ணகரம் அல்லது வைகுந்த விண்ணகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.  திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் #திருநாங்கூரில் அமைந்துள்ளது.  இக்கோயில் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று.  வைகுண்டமான பரமபதத்தில் சங்கு சக்கரங்களுடன் எழுந்தருளியுள்ள வைகுண்டநாதனே இந்த வைகுந்த விண்ணகரத்தில் உள்ளான் என்பதும் சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்த பரமபத நாதன் புறப்பட்டு வர அவரைப் பின்பற்றி 10 பெருமாள்களும் இவ்விடம் (திருநாங்கூர்) வந்தனர் என்பதும் தொன்நம்பிக்கை.  பரமபதத்தில் இருந்து வந்ததால் அதே […]

விநாயகரின் 16 வடிவங்களும்:

விநாயகரின் 16 வடிவங்களும்: #பாலகணபதி: மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும், கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் #சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் #பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். #தருண கணபதி: பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், நெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தி, சூரியோதய கால ஆகாயத்தின் #செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர். இவரை வழிபடுவதால் முகத்தில் களை உண்டாகும். #பக்த கணபதி: தேங்காய், […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by