December 30 2019 0Comment

இரகசியம் ஜனவரி 4 ,5 தேதிகளில் திருச்சி சமயபுரத்தில் !!!

என் வாழ்க்கை பயணத்தை முழுமையாக என் அப்பன் முருகனிடம் கொடுத்து சரணடைந்தேன். சரியான நேரத்தில் சரியான மனிதரிடம் கொண்டு போய் என்னை சேர்த்தார் சில அதிசயங்களை நடத்தி.
அந்த மனிதர் அண்ணா   Andal P Chockalingam அவர்கள் தான் இவரை மனிதர் என்று சொல்வதை விட மாமனிதர் என்றே சொல்ல வேண்டும்.
சில விஷயங்களை நாம் சொல்வதால் கேட்க தான் முடியுமே தவிர உணர முடியாது. சீனி இனிக்கும் என்று சொல்வதால் அதன் இனிப்பை ஒருவர் உணர முடியாது அவரும் அதை ருசித்தால் மட்டுமே உணர முடியும். வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை இருக்கும். பிரச்சனை வரும் போது எல்லாம் முதலில் நாம் தேடி ஓடுவது கடவுளை கூட இல்லாமல் ஜோசியர்களை தேடி ஓடுகிறோம். இன்று தடுக்கி விழுந்தால் 1000 ஜோசியர்கள் ஆயிரம் பரிகாரங்கள் இதை எல்லாம் செய்தால் நம் பிரச்சனை தீர்வது இல்லை நாம் இதை லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து செய்யும் போது நமக்கு எந்த தீர்வும் கிடைப்பது இல்லை ஆனால் ஜோசியர்கள் எல்லாம் நல்லா இருக்காங்க.
பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி சென்று இன்னும் பல பிரச்சனைகளை நாம் சேர்த்து கொள்கிறோம்.
ஆனால் Andal P Chockalingam அண்ணா அவர்களிடம் பிரச்சனை என்று செல்லும் போது அவர் செய்வது நம் தன்னம்பிக்கையை தட்டி எழுப்பி அத்தனை பிரச்சனைகளையும் நாம் சந்தித்தாலும் அதை நம் தன்னம்பிக்கை கொண்டே வெற்றி அடைய செய்கிறார்.
இன்று கடன் பிரச்சனை என்று எத்தனையோ தற்கொலைகளை பார்க்கிறோம் இது போல இனி எனக்கு வாழவே வழி இல்லை எனக்கு அவ்வளவு பிரச்சனை என்பவர்கள் எல்லாம் கட்டாயம் ஒருமுறை அண்ணா Andal P Chockalingam அவர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கு பெறுங்கள் கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் எந்த மாயா ஜாலமும் பரிகாரமும் செய்யாமல் உங்கள் தன்னம்பிக்கை கொண்டே உங்கள் வாழ்க்கையில் மாயா ஜாலம் நிகழ்த்துவார் உங்கள் வாழ்வை மாற்றுவார்.
அண்ணா அவர்கள் நடத்தும் நிகழ்ச்சி திருச்சியில் வரும் ஜனவரி 4 , 5 தேதிகளில் நடைபெறுகிறது. என் வாழ்வில் பிரச்சனைகள் துன்பங்கள் தவிர வேறு எதுவும் இல்லை கடன் பிரச்சனையில் மூழ்கியே விட்டேன் என்று இருக்கும் நண்பர்கள் யாராவது இருந்தால் இந்த வாய்ப்பை பயன் படுத்தி உங்கள் வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு செல்லுங்கள்.
முருக பெருமான் திருவருளால் இந்த பதிவு நிச்சயமாக யாரோ ஒருவருக்காவது பயன் படும் என்றே பதிகிறேன்.
வெளியே சொல்ல முடியாமல் பிரச்சனைகள் துன்பங்களில் தவிப்பவர்கள் இந்த நிகழ்ச்சியை பயன் படுத்தி பயன் அடையுங்கள்.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே –
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே;
அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று.
Thanks to ramasamy
Share this:

Write a Reply or Comment

four × four =