June 22 2022 0Comment

கல்மரம் ஆக மாற வேண்டிய நேரம் இது

கல்மரம் ஆக மாற வேண்டிய நேரம் இது

ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது.

சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள்.

ஒரு நாள் அந்த நகை வியாபாரியின் மனைவி தன் மகனை அழைத்து, ஒரு நீலக் கல் பதித்த நெக்லஸை அவனது கையில், கொடுத்துக் கூறினாள்…

மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் கடைக்குச் செல். அவரிடம் இதை விற்று நமக்குக் கொஞ்சம் பணம் தரும்படி கேள் என்றாள்.

மகன் அந்த நெக்லஸை எடுத்துக் கொண்டு, அவனது மாமாவின் கடையை அடைந்தார்.அவரது மாமா அந்த நெக்லஸை முற்றிலுமாகப் பார்த்தார்.

பார்த்த பின். என் அன்பு மருமகனே, உன் அம்மாவிடம் கூறு! அதாவது இப்போது மார்க்கெட் மிகவும் மோசமாக இருக்கிறது. கொஞ்ச நாள் கழித்து இதை விற்றால், அவளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று..

பின் குடும்ப செலவுக்காக அவர் தன் மருமகளிடம் கொஞ்சம் பணத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.

மேலும் நாளை முதல் கடைக்கு வந்து என்னுடன் உட்கார்ந்து வேலையை கற்றுக்கொள் என்றார்.

எனவே, அடுத்த நாள் முதல், அந்தப் பையனும் தினமும் கடைக்குப் போகத் தொடங்கினார். அங்கே அந்த தொழிலை நன்கு கற்றுக் கொள்ளத் தொடங்கினார்.

எப்படி வைரம் மற்றும் கற்களை பரிசோதிக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டார்.

விரைவிலேயே, அவர் நகைத் தொழிலில் மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு சிறந்த அறிவாளியாக மாறினார்.

மேலும் அந்த பகுதி வட்டாரத்தில் வைரத்தைப் பற்றி பகுத்தாய்வு செய்து கூறுவதில் பெரிய வல்லுநராக மாறி விட்டார்.

நெடுந்தொலைவில் இருந்தும் கூட, மக்கள், இவரிடம் வைரத்தைப் பரிசோதிப்பதற்காக வந்தார்கள்.

ஒரு நாள் அவரது மாமா கூறினார்…

மருமகனே,

நீ என்னிடம் விற்க எடுத்து வந்த அந்த நெக்லஸை உன் அம்மாவிடம் இருந்து இப்போது வாங்கி வா!

அவளிடம் கூறு…

அதாவது மார்க்கெட் நிலைமை இப்போது நன்றாக இருக்கிறது. இப்போது அதை விற்றால் உனக்கு நல்லதொரு விலை கிடைக்கும்.

மாமா சொன்னதற்கு இணங்க அம்மாவிடம் இருந்து நெக்லஸை பெற்று அவராகவே அதனைப் பரிசோதித்தார். தீவிர பரிசோதனைக்கு பிறகு தன்னுடைய அம்மாவின் நெக்லஸ் ஒரு போலி என்பதைக் கண்டு பிடித்தார்.

இருந்ததாலும் அவருடைய மாமா,
ஒரு சிறந்த வல்லுநராக இருந்தும், இதை ஏன் நம்மிடம் தெரிவிக்கவில்லை? என்று அவர் ஆச்சரியம் அடைந்து,
நெக்லஸை வீட்டில் விட்டுவிட்டு மாமா கடைக்கு திரும்பி வந்து,

மாமா அது போலியானது.
உங்களுக்கும் அது போலியானது என்று நிச்சயமாக தெரிந்திருக்கும்.
ஆனால், இந்த விஷயத்தை என்னிடமிருந்து நீங்கள் ஏன் மறைத்தீர்கள்?

பிறகு அவன் மாமா கூறினார்…

நீ முதன் முதலில் நெக்லஸை என்னிடம் கொண்டு வந்த போது, “அது போலியானது” என்று நான் உன்னிடம் கூறியிருந்தால், நான் வேண்டுமென்றே இதைக் கூறுவதாக நீ நினைத்துக் கொள்ளக் கூடும். ஏனென்றால், அப்போது நீ ஒரு கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாய்.

இன்று நீயாகவே இதைப் பற்றிய அறிவை பெற்றிருப்பதால், இந்த நெக்லஸ், “உண்மையிலேயே போலியானது” என்பதை நீ உறுதியாக அறிந்திருப்பாய்.

அந்த நேரத்தில், “உண்மையைக்” கூறியாக வேண்டும் என்பதை விட… “உறவு இழையை அறுந்து விடாமல் காப்பது “மேலானது” மற்றும் “முக்கியமானதாக” எனக்கு தோன்றியது.

நண்பர்களே!

“எந்த வித பட்டறிவும்” இல்லாமல், நாம் இந்த உலகில் “பார்ப்பது,” “நினைப்பது,” “தெரிந்து கொள்வது” எல்லாமே “தவறு” என்று கூறுகின்றோம்.

“தவறான புரிதல்” நம்முடைய உறவு முறைக்கு, பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது.

பிறகு “முறிவுக்கு” இட்டுச் செல்கிறது.

நம்முடைய வாழ்க்கையும் தனியாக நின்று “வீழ்ச்சியும்” அடைகின்றது.

*நம் “உறவின் இழைகளை” அறுந்து விடாதவாறு பாதுகாத்து வாழ்வோம்!.*

மரம் சும்மா இருக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை என்பது உண்மைதான் என்றபோதிலும் நாம் குறை சொன்னால் அசைக்கமுடியாத கல் மரமாக மாற வேண்டிய நேரம் இது.

நம் சுற்றம் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்

நாம் எல்லாவற்றையும் மாற்றும் கடவுளாக மாற வேண்டிய நேரம் இது

மாறுவோம்….
மாற்றுவோம் …..

Share this:

Write a Reply or Comment

2 × 4 =