November 07 2021 0Comment

நரியே பரியாகும் போது?? சிறகுகள் 11

நரியே பரியாகும் போது?? சிறகுகள் 11

திருமணமாகவில்லை
குழந்தை இல்லை
கடன் தொல்லை
சுற்றம் புரிந்து கொள்ளவில்லை
அனைவரும் ஏமாற்றுகிறார்கள்
எதிர்காலம் குறித்து பயமாக உள்ளது
அந்த செலவுக்கு பணத்திற்கு என்ன செய்வேன்
எனக்குப் பிறகு என் குடும்பம் என்ன ஆகும்
என ஆயிரம் கேள்விகள் ஒவ்வொருவருக்கும் உண்டு
மூல கேள்விக்கான பதிலை புரிந்து கொண்டு விட்டால்
வாழாத வாழ்க்கையை கூட
ரசித்து வாழ முற்பட்டு விடுவோம்
அந்த பதில்
நீ இந்த பூமிக்கு வருவதற்கு முன் இந்த உலகம் எப்படி இருந்ததோ
நீ இல்லாமல் போனாலும் அப்படியே இருக்கும் உனக்கு பிறகும்.
மேலும்
எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் அதிகபட்சமாக மூன்றே நாளில் அவருடைய இழப்பு இந்த பூமியால் நேர் செய்யப்படும்
உலகத்தின் பெரிய ஆளுமைக்கே இதுதான் நியதி என்கின்றபோது
நீ இல்லாமல் போனால்
நீ மட்டும் இல்லாமல் போனால்
எதுவும் மாறப்போவதில்லை
எதுவும் நின்று போக போவதில்லை என்பது மட்டுமே நிஜம்
இந்த தின வாழ்க்கையே விசித்திரம்
என்ற உண்மையை புரிந்து
வாழ்பவர்கள் மட்டும் படைக்கிறார்கள் சரித்திரம்.
ஒரு பக்கம்
இருந்து என்ன ஆகப்போகிறது செத்துத் தொலையலாம் என்று கோடி பேர் தினமும் கண் விழிக்கின்றார்கள்
இன்னொரு பக்கம்
செத்து என்ன ஆகப்போகிறது இருந்தே தொலையலாம் என்று கோடி பேர் தினமும் கண்
மூடுகின்றார்கள்
கண்விழிப்பவனுக்கும்
கண்மூடுபவனுக்கும்
தொலைந்து போக மட்டுமே ஆசை இந்த பூமியில்.
தொலைவதற்காகவா இந்த வாழ்க்கை
அத்தனையையும்
அடைவதற்காக தானே இந்த வாழ்க்கை
நீ வாழும் இந்த மண்ணில்
நரி பரி ஆவதும்
பரி நரி ஆவதும்
சாத்தியப்படும்போது
உனது வினாக்களுக்கு
விடைகளும் நிச்சயம் சாத்தியப்படும் உங்களுக்கு
மட்டும் நம்பிக்கை இருந்தால் உங்கள் மேல்
நீங்கள் ஆசைப்பட்ட அத்தனையையும் அடைய ஆயிரம் வழி கிடைக்கும் உங்களுக்கு மட்டும் நம்பிக்கை இருந்தால் உங்கள் மேல்
அத்தனையும் சாத்தியப்பட அத்தனைக்கும் ஆசைப்படு
நீ ஆசைபடுபவை அத்தனையும் ஒருகால் நிராசையாக மாற்றப்படலாம்
நீ ஆசைப்படுபவை அத்தனையும் பேராசை என்று நிராகரிக்கப்படலாம்
எது எப்படி இருந்தாலும்
அத்தனையும் ஒரு நாள் உனக்கு
நிச்சயம் சாத்தியப்படும் என நம்பு-
அது மட்டுமே போதும்
உன் எண்ணங்கள் ஈடேற
வண்டியும் ஒரு நாள்
ஓடத்தில் ஏறும்
ஓடமும் ஒரு நாள்
வண்டியில் ஏறும்.
என காத்திரு விழித்திரு
உன் கனவுகளும் எண்ணங்களும்
சாத்தியப்பட,சாத்தியப்பட்டு கொண்டே இருக்க அத்தனைக்கும் ஆசைப்படு
காரணம்
உன்னால் முடியும்
உன்னாலும் முடியும்
சில நேரங்களில்
உன்னால் மட்டுமே முடியும்
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்
May be an image of 1 person, standing and indoor
Share this:

Write a Reply or Comment

five × two =