August 13 2020 0Comment

பயணங்கள் முடிவதில்லை….

பயணங்கள் முடிவதில்லை….
 
நான்காயிரம் கிலோ மீட்டர் பயணமே
என்றாலும் முதல் அடியில் இருந்து தானே துவங்க வேண்டும்..
 
ஒவ்வொரு அடியாக தானே நகர முடியும்.
 
மொத்த பாதையும் இங்கிருந்தே தெரியாவிட்டாலும்
 
பயணம் தொடர்ந்தால்
பாதை விலகும்,
பாதை கிடைக்கும்
என்ற மிகப்பெரிய நம்பிக்கையிலும்;
 
தள்ளுதலும் கொள்ளுதலும் தானே வாழ்க்கை என்கின்ற துணிவு இருப்பதாலும்
 
முதலடியை எடுத்து வைக்கின்றேன்.
 
பயணமே இலக்கு…
வாகனமே வீடு…
என்று வாழும் இந்த தேசாந்த்ரி
வாகன கவச நாயகனான இளையராஜா அவர்களின் பாடல்களின் துணையுடன்…..
 
பயணங்கள் முடிவதில்லை….
 
டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
https://www.facebook.com/watch/?v=290623342037573
 
Share this:

Write a Reply or Comment

4 × five =