December 05 2018 0Comment

கஜா புயல் நிவாரண உதவி

அனைவருக்கும் வணக்கம்,
கஜா புயல் நிவாரண உதவிக்கு ஆண்டாள் வாஸ்து குழுவிடம் மக்கள் ஒப்படைத்த பொருட்களையும், ஆண்டாள் வாஸ்து நிபுணர்களின் பங்களிப்பையும் சேர்த்து கீழ்க்கண்ட இடங்களுக்கு நிவாரண பொருட்கள் கொடுக்கப்பட்டது.
நிவாரண உதவி குழு தலைவர் பிரபல ஆண்டாள் வாஸ்து நிபுணர் கும்பகோணம் திரு.பாலா(8344785555) அவர்கள் தலைமையில் ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு.சக்திவேல்(8883455559), திருத்துறைபூண்டி திரு.ராஜப்பா(9442514592), விழுப்புரம் திரு.ஜவகர்(9841940774), திருவாரூர் திரு.செல்வகுமார்(9600717169), பட்டுகோட்டை திரு.ராம் பிரணவ்(8825577416) மற்றும் சீர்காழி திருமதி.கீதா ராஜேந்திரன்(9087847303) ஆகியோர் கடும் பிரச்சினைகளுக்கு நடுவே செண்பகராயநல்லூர் மேற்கு, கீழ கொருக்கை கிராமங்களுக்குள் உட்புகுந்து வெற்றிகரமாக நிவாரண பொருட்கள் கொடுத்து திரும்பினார்கள்.
மேலும்  அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன உதவித்தொகை கொடுக்கின்றது என்பதை பார்த்த பின் 25 நபர்களுக்கு ஆண்டாள் வாஸ்து குழுமம் சார்பாக வீடு கட்ட உதவுவதாக முடிவெடுத்திருக்கின்றோம்.
ஆண்டாள் வாஸ்து குழுமம் மூலமாக பொருட்களையும், பணத்தையும் கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
Share this:

Write a Reply or Comment

nineteen − eight =