சுவேதாரண்யேஸ்வரர் கோவில்:

  சுவேதாரண்யேஸ்வரர் கோவில் திருவெண்காடு : திருவெண்காடு, நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ளது. இங்கு தவம் செய்த இந்திரனின் வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் பெயரில் இருந்தே இத்தலத்தின் பெயர் இவ்வாறு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது தென்னிந்தியாவின் ஒன்பது நவக்கிரக கோவில்களுள் ஒன்றாகும். இவை 1000 – 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை ஆகும். சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். தேவாரப் பாடல் […]

சரஸ்வதி கோவில்

  சரஸ்வதி கோவில் கூத்தனூர் : கூத்தனூர் சரஸ்வதி கோவில் இந்து மதப்புராணங்களில் கல்விக் கடவுளாக குறிப்பிடப்படும் சரஸ்வதி தேவிக்காகக் கட்டப்பட்ட அரிய கோவில்களுள் ஒன்றாகும். கூத்தனூர் சரஸ்வதி கோவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-திருவாரூர் தொடருந்துத் தடத்தில் பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே இக்கோவில் உள்ளது. தல வரலாறு : சத்தியலோகத்தில் வாழ்ந்த தம்பதியினரான பிரம்மனுக்கும் சரஸ்வதிக்குமிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. கல்விக்கரசியான தன்னாலேயே சத்தியலோகம் பெருமையடைகிறது என்று சரஸ்வதியும் தன் படைப்புத் தொழிலால்தான் சத்தியலோகம் பெருமையடைகிறது […]

ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்

    ஆபத்சகாயேஸ்வரர் : தட்சன், சூரியபகவான் மற்றும் அக்னிதேவன் ஆகிய மூவரும் சாப விமோச்சனம் பெற்ற தலமாக விளங்குகிறது. நாகை மாவட்டம், பொன்னூர் கிராமத்தில் இருக்கும் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில். ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் (இரும்பூளை) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 98ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தில் ஆலகால நஞ்சை உண்டு தேவர்களை இறைவன் காத்தான் என்பது தொன்நம்பிக்கை. இத்தலம் குருஸ்தலமாக போற்றப்படுகிறது. […]

சமேத தியாகராஜ சுவாமி திருக்கோவில்

சமேத தியாகராஜ சுவாமி திருக்கோவில்: பிரம்மா சிவனைநோக்கி கடுமையான தவம் இருந்த இடம் பண்டைய காலத்தில் கற்றலுக்கு ஒரு சிறந்த மையமாக இருந்ததும் மற்றும் பூலோகத்தில் உள்ள சிவலோகம் போன்ற பெருமைகளை உடையது சென்னை திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வடிவுடைஅம்பாள் சமேத தியாகராஜ சுவாமி திருக்கோவில். இறைவன் – ஆதிபுரீஸ்வரர் புற்றிடங்கொண்டார் படம்பக்கநாதர் எழுத்தறியும் பெருமாள் தியாகேசர் ஆனந்தத்தியாகர் மாணிக்கம். இறைவி – திரிபுரசுந்தரி வடிவுடையம்மை வடிவுடை. தலமரம் – மகிழ மரம். தீர்த்தம் – பிரம தீர்த்தம். புராண பெயர் […]

கொடுங்குன்றநாதர் திருக்கோவில்:

  கொடுங்குன்றநாதர் திருக்கோவில்: பிரான்மலை உமாமகேசுவரர் கோவிலில் (கொடுங்குன்றம்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் திருப்பத்தூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் சிங்கம்புணரி என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் கொடுங்குன்றீஸ்வரர் இறைவி அமுதாம்பிகை. மூலவர் : கொடுங்குன்றநாதர் விஸ்வநாதர் மங்கைபாகர். தாயார் : குயிலமுதநாயகி,விசாலாட்சி தேனாம்பாள். தல விருட்சம் : உறங்காப்புளி பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன். புராண பெயர் : எம்பிரான்மலை திருக்கொடுங்குன்றம். […]

சிந்தை மகிழும் சித்திரை மாதம்!

  சிந்தை மகிழும் சித்திரை மாதம்! நமது தமிழர்களை பொறுத்தவரை மிகவும் பழங்காலத்திலிருந்தே மாதங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். தமிழ் மாதங்கள் மொத்தம் பனிரெண்டு ஆகும். பண்டைய தமிழர்கள் இரண்டு வகையாக மாதங்களை குறித்து வந்துள்ளார்கள். பூமிக்கு சார்பாக சூரியனின் இயக்கத்தை வைத்தும், பூமிக்கு சார்பாக சந்திரனின் இயக்கத்தை வைத்தும் மாதங்களை கணக்கிட்டார்கள். அவையாவன : சூரிய மாதம் என்றும் சந்திர மாதம் என்றும் வழங்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் முதலாமானவள் என்ற சிறப்பை […]

சொர்ணகாளீஸ்வரர் கோவில் 

சொர்ணகாளீஸ்வரர் கோவில் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவில் என்ற ஊரில் அமைந்துள்ளது. சொர்ணகாளீஸ்வரர் கோவில் சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். மூலவர் : சொர்ணகாளீஸ்வரர். தாயார் : சொர்ணவல்லி. தல மரம் : மந்தாரை. தல விருட்சம் : கொக்கு மந்தாரை. தீர்த்தம் : கஜபுஷ்கரணி, சிவகங்கைக்காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம்,சரஸ்வதி தீர்த்தம்,கௌவுரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம்,லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம். புராண பெயர்கள் : திருக்கானப்பேர். ஊர் : காளையார் கோவில். மாவட்டம் […]

நல்லதங்காள் கோவில் :

  நல்லதங்காள் கோவில் வத்திராயிருப்பு: தமிழ்நாடு மாநிலம் விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு என்ற பகுதியில் உள்ளது. குழந்தை பேறு கொடுக்கும் தலங்களில் ஒன்றானது நல்லதங்காள் கோவில். இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆக கருதப்படுகிறது. தல வரலாறு : அர்ச்சுனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்லதம்பி நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள். இவர்கள் தாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தனர். இருந்த […]

காசி விஸ்வநாதர் கோவில்

                                      காசி விஸ்வநாதர் கோவில்: காசி விஸ்வநாதர் கோவில் மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் திருத்தலமாகும். இக்கோவில் உத்திரப்பிரதேசத்திலுள்ள வாரணாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது. வாரணாசி என்று தற்போது அழைக்கப்பெற்றாலும் பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டதால் இத்தலம் காசி விஸ்வநாதர் கோவில் என அழைக்கப்படுகின்றது. விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும். […]

அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் கோவில்

அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் கோவில்: இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில், கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பிரசித்தி பெற்ற இந்து கோவில் ஆகும். இந்த கோவில் கோபிச்செட்டிப்பாளையம் நகரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் பாரியூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இதன் முதன்மை தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் ஆகும். மூலவர் : காளியம்மன் (கொண்டத்துகாரி) புராண பெயர் : அழகாபுரி, பாராபுரி ஊர் : பாரியூர் மாவட்டம் : ஈரோடு தல வரலாறு: இந்த கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது.தற்போது இருக்கும் கோவில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by