October 09 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   மன்னாடிமங்கலம்

  1. அருள்மிகு நரசிங்கப்பெருமாள் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்          :      நரசிங்கப்பெருமாள்

தாயார்           :      ஸ்ரீதேவி, பூதேவி

தல விருட்சம்   :      முக்கனி விருட்சம்

தீர்த்தம்          :      வைகை

புராண பெயர்    :      தோழியம்மாள்புரம்

ஊர்              :      மன்னாடிமங்கலம்

மாவட்டம்       :      மதுரை

 

ஸ்தல வரலாறு:

சிவனை நோக்கி தவம் செய்த இரணியன், தேவர், அரக்கர், மனிதர், விலங்குகள், பறவைகள் மற்றும் ஆயுதங்களால் தான் கொல்லப்படக்கூடாது என்ற வரம் பெற்றான். அனைவரையும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த அவன் தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்றான். ஆனால், அவனது மகனாகப்பிறந்த பிரகலாதன், தந்தையை வணங்காமல் நாராயணனை வணங்கி வந்தான். கோபம்கொண்ட இரணியன், மகனை துன்புறுத்தி அவன் வணங்கும் நாராயணனை காட்டும் படி கூறினான். அது பகல் நேரம் முடிந்து இரவு நேரம் தொடங்கும் அந்திக்காலம். அப்போது, தூணிலிருந்து சிங்க முகமும், மனித உடலும் கொண்ட உருவில் தோன்றிய மகாவிஷ்ணு, இரணியனை அழித்தார். இவரே, இத்தலத்தின் மூலவராக இருந்து அருளுகிறார்.

 

கோயில் சிறப்புகள்:

  • இத்தலத்தில் உள்ள நரசிங்கர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார்.

 

  • மூலவரின் திருநாமம் நரசிங்க பெருமாளாக இருந்தாலும், முகம் நரசிம்மருக்கு உரியதைப்போல் இல்லாமல் பெருமாளைப்போல தோற்றமளிக்கிறார்.

 

  • மகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தைக் காண ஆஞ்சநேயர் விரும்பியதால் அவருக்கு சோளிங்கபுரத்திலும், கருடனின் விருப்பத்தால் அவருக்கு அகோபிலத்திலும் காட்சி தந்து அருளினார். எனவே இங்கு இவ்விருவரும் மகாமண்டபத்தில் துவாரபாலகர்களாக காட்சி தருகின்றர். கொடிமரம், விமானம் இல்லை.

 

  • வளாகத்தில் மா, பலா, வாழை ஆகிய முக்கனி மரங்கள் தலவிருட்சங்களாக உள்ளன.

 

  • ஸ்ரீவில்லிபுத்தூரில் காட்சி தருவதைப்போலவே, இங்குள்ள ஆண்டாள், முன்புறம் துளசிமாடம், பின்புறம் தீர்த்தத்தொட்டி அமைந்திருக்க மத்தியில் அருளுகிறாள்.

 

  • வலம்புரி விநாயகர், நம்மாழ்வார், நாகர், சந்தான கோபால கிருஷ்ணன், துர்க்கை ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர்.

 

திருவிழா: 

வைகுண்ட ஏகாதசி, தனுர்மாத பூஜை, திருக்கார்த்திகை தீபம்.

 

திறக்கும் நேரம்:

வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டும்  காலை 8 – 10, மாலை 5 – 7 மணி வரையில் நடை திறந்திருக்கும். பிற நாட்களில் அர்ச்சகரிடம் தொடர்பு கொண்டு செல்வது நல்லது.

 

போன்:    

+91- 4543 – 253 254, 253 757

 

முகவரி:  

அருள்மிகு நரசிங்கப்பெருமாள் சுவாமி திருக்கோயில்,

மன்னாடிமங்கலம்-625 207,

மதுரை மாவட்டம்.

 

அமைவிடம்:

மதுரையிலிருந்து 30 கி.மீ., சோழவந்தானிலிருந்து 3 கி.மீ. மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ்கள் உள்ளன. குருவித்துறை செல்லும் பஸ்கள் இவ்வழியே செல்கின்றன.

Share this:

Write a Reply or Comment

four × 5 =