December 22 2023 0Comment

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருக்குறையலூர், சீர்காழி

  1. அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில் வரலாறு

 

மூலவர்        :     நரசிம்மர்

தாயார்          :     அமிர்தவல்லி

ஊர்            :     திருக்குறையலூர், சீர்காழி

மாவட்டம்       :     நாகப்பட்டினம்

 

ஸ்தல வரலாறு:

சிவனை அவமரியாதை செய்யும் வகையில், பார்வதியின் தந்தை தட்சன் ஒரு யாகம் நடத்தினான். இதனால் கோபம் கொண்ட பார்வதி, தந்தைக்கு புத்தி புகட்ட யாகம் நடக்கு மிடத்திற்குச் சென்றாள்.அவளையும் தட்சன் அவமரியாதை செய்யவே, யாகத்தீயில் விழுந்து விட்டாள். கோப மடைந்த சிவன், தனது அம்சமாக வீரபத்திரரை உருவாக்கி அனுப்பி யாகத்தை அழித்தார். மேலும், பார்வதியைப் பிரிந்த துயரம் சிவனை வாட்டியது.நரசிம்மர் அவருக்கு இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தந்து அமைதிப்படுத்தி யதாக தல புராணம் கூறுகிறது. நரசிம்மரை இவ்வாறு இரண்டு தாயார்களுடன் தரிசிப்பது மிகவும் அரிது.

 

கோயில் சிறப்புகள்:

  • நரசிம்மரை இத்தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக இரண்டு தாயார்களுடன் தரிசிப்பது மிகவும் அரிது.

 

  • குறையலூர் தலத்துக்கு வந்து உக்கிர நரசிம்மரைப் பிரார்த்தனை செய்து கொண்டால், குறைவின்றி வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

 

  • திருக்குறையலூர். ஏழரை அடி உயரத்திற்கு இங்கே நரசிம்மர் உக்ர மூர்த்தியாக இருக்கிறார்.

 

  • தாயார் அமிர்தவல்லி தனி சன்னதியில் அருளு கிறாள். பிரதோஷ நாட்களில் நரசிம்மருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.

 

  • நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ளன. அடுத்தடுத்த ஊர்களில் பஞ்ச நரசிம்மத் திருத்தலங்கள் அமைந்துள்ளன.. ஸ்ரீஉக்கிர நரசிம்மர், ஸ்ரீவீர நரசிம்மர், ஸ்ரீஹிரண்ய நரசிம்மர், ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் கோயில்கள்

 

  • பஞ்ச பூதங்களில் நெருப்பின் உருவமாக, நெருப்பின் வடிவமாக ஸ்ரீஉக்கிர நரசிம்மர் காட்சி அருளிய தலம்.

 

  • திருமங்கை ஆழ்வாரின் அவதாரத் தலம் எனப் பெருமை கொண்ட இந்தத் திருத்தலத்தில், அவருக்கும் குலசேகர ஆழ்வாருக்கும் சந்நிதிகள் உள்ளன.

 

  • திருமங்கை ஆழ்வார் அவதரித்த தலம் இது. இக்கோயிலில் இவருக்கு சன்னதி உள்ளது. துவாபர யுகத்தில் உபரிசிரவஸு என்ற மன்னனாகப் பிறந்த இவர், இங்கு நரசிம்மரை வழிபட்டு, அடுத்த பிறப்பில் நீலன் என்னும் மன்னனாக இங்கு அவதரித்ததாக மங்களபுரி மகாத்மியம்கூறுகிறது.

 

  • திருமங்கையாழ்வார், 108 திவ்ய தேசங்களில் 86 தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். இதன் அடிப்படையில் அவர் அவதரித்த இத்தலத்து நரசிம்மரை வழிபட்டால் 86 பெருமாளையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

 

  • இத்தலத்தில் அவதரித்திருந்தாலும், திருமங்கையாழ்வார் இங்கு சுவாமியை மங்களாசாசனம் செய்ய வில்லை. வேறு தலத்தை மங்களாசாசனம் செய்யும் போது, இத்தல நரசிம்மரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

 

  • தைமாத அமாவாசையை ஒட்டி, இவ்வூர் அருகில் உள்ளதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது மான திருநாங்கூரில் 11 கருட சேவை நடக்கும்.அப்போது, திருநாங்கூரில் இருந்து திருமங்கையாழ்வார் இக்கோயிலுக்கு எழுந்தருள் வார். “திருப்பல்லாண்டு தொடக்கம்’ என்னும் தமிழ்மறை பாடி சுவாமியை வழிபடும் வைபவம் நடக்கும்.

 

  • மிகவும் பழமையான இத்தலத்தை “ஆதி நரசிம்மர் தலம்’ என்றும், தெற்கில் மிகவும் உயர்ந்த நரசிம்ம ஷேத்திரம் என்பதால் “தட்சிண நரசிம்மர் தலம்’ என்றும் சிறப்பு பெயரிட்டு அழைக்கிறார்கள். பத்ம புராணம், நாரத புராணத்தில் இத்தலம் ஸ்ரீபூரணபுரி, பூரண நரசிம்ம ஷேத்திரம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

  • சுவாமி மலைக்கும், திருக்கூடலூருக்கும் இடையே காவிரியில் துணை ஆறாக பிரியும் மண்ணியாறு திருக்குறையலூர் வழியாக சென்று கடலில் கலக்கும் சிறப்பை வைணவ ஆச்சாரியார்கள் “மண்ணியில் நீர் தேங்கும் குறையலூர், சீர்கலியன் தோன்றிய ஊர்’ என்று சிறப்பித்து பாடியுள்ளனர்.

 

  • குலசேகர ஆழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் போன்றோர் தரிசனம் செய்து நிறைவுற்ற தலம்.

 

திருவிழா: 

நரசிம்மர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி

 

திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 11 மணி வரை,

மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

 

முகவரி:  

அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில்,

திருக்குறையலூர் – 609 106

நாகப்பட்டினம் மாவட்டம்.

 

போன்:    

+91- 94435 64650, 94430 07412.

 

அமைவிடம்:

சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 10 கி.மீ., தூரத்தில் உள்ள மங்கை மடம் என்ற ஊருக்குச் சென்று, அங்கிருந்து 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். மங்கைமடத்திலிருந்து பஸ் வசதி மிகவும் குறைவு. வேறு வாகனங்களில் சென்று திரும்பலாம்.

 

Share this:

Write a Reply or Comment

five × two =