October 05 2021 0Comment

ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் அன்னதானம்

விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழகம் முழுவதும் அன்னதானம்

விஸ்வ ஹிந்து பரிஷத் வட தமிழகம் அமைப்பின் சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைமை அலுவலகத்தில் தினமும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தமிழக காவல்துறை முன்னாள் தலைவர் பாலசந்தர் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் வட மாநில அமைப்பு செயலாளர் சு. வே. ராமன் முன்னிலை வகித்தார். இதுகுறித்து ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைவர் சொக்கலிங்கம் கூறுகையில் , ‘தமிழகம் முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளோம்.
திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 12:00 மணி முதல் 1:00 மணி வரை அன்னதானம் நடைபெறும். நாள் ஒன்றுக்கு 300 பேர் முதல் 500 பேர் சாப்பிட ஏற்பாடு செய்துள்ளோம். தனி மனிதர் ஒருவர் உணவு இல்லாமல் பசியாக இருக்க கூடாது என பாரதியார் பாடிய பாடல் வரியை மெய்ப்பிக்கும் வகையில் இந்த உன்னதமான திட்டத்தை துவக்கி உள்ளோம்’ என்றார்.

TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு, விஸ்வ ஹிந்து பரிஷத்

 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2860083

Share this:

Write a Reply or Comment

three + thirteen =