May 29 2018 0Comment

நாராயணா:

நாராயணா……

ஆண்டாள்

கொடுத்த

30 லட்சம்

ரூபாய்

காரில் 

காருக்குள்

குளிரூட்டப்பட்டு

தனியே

போனாலும்

சென்னை

வெயிலால்

வெறுப்படைந்து

மதிய

தூக்கம்

கண்

தழுவ

போரூர்

சிக்னலில்

சிக்னலுக்காக

நின்றபோது

வயதான 

உயரமான 

அழுக்கு

வெள்ளை

வேட்டி

சட்டையுடன்

என் 

இடது பக்க

ஜன்னலை

தட்டிய

போது

அவர்

முகத்தை

பார்த்தேன்

ஏனோ

என் 

அப்பா

அந்த 

நொடியில்

நினைவுக்கு

வந்துபோனார்

என் அப்பாவும்

நான் கல்லூரி 

படிக்க

இப்படித்தானே

பணம்

கேட்டிருந்திருப்பார்

வந்த 

நொடி 

நினைவை

உடைத்து

சடாரென்று

பர்சை

எடுத்து

அவரை

என் 

பக்கம்

வரச் சொன்னேன்

அதுக்குள்

சிக்னல்

விழுந்ததால்

முட்டா 

கூட்டம்

அதிகம்

வாழும் 

சென்னையின் 

மைந்தர்

ஒருவர்

பாம்

என்று

horn

சத்தம்

சடக்கென்று

எனக்குள்

ஒரு

பதட்டம்

பணம்

கொடுக்க

முடியாமல்

போய்

விடுமோ

என்று

அவசரமாக

வந்தவரிடம்

ரூபாயை

திணித்த

போது

அவர்

பணத்தையே

பார்க்காமல்

என்

கண்ணை

பார்த்து

நாராயணா

நாராயணா

என்று

அழுத்தமாக

சொன்னபோது

பகீர்

என்றது

வெலவெலத்துப்

போய்

விட்டேன்

ஆண்டாளை 

தவிர

இந்த

பூமியில்

வேறு 

யாராலும்

இவ்வளவு

அக்க்ஷர

சுத்தமாக

சொல்ல

முடியாது

சொன்னவள்

ஆண்டாளோ

அப்படித்

தானே

இருக்கமுடியும்

பிச்சை

எடுத்து

தான்

பிழைப்பு

என்றாலும்

நாராயணனே

பரப்ப்ரமம்

என்பதை

மறவாத

மனம்

அவள்

ஒருத்திக்கு 

தானே

இப் பூமியில்

உண்டு

பெரியவர்

சொன்னதை

கேட்க தான்

என்

காதுகள்

இரண்டும்

என்

மூலமாக

இப்பிறவி

எடுத்திருக்கும்  

போல…..

ஒன்று 

நிச்சயம்

பெரியவர்

சொன்ன

வார்த்தைக்கு

சன்மானமாக்க

இந்த

மொத்த

பூமியும்

பத்தாது

நன்றி

ஆண்டாளே

இந்த

அற்புத

ஆனந்த

சந்தோசத்தை

மீண்டும்

அடைய

அடுத்த பிறவியும்

எனக்கு

இப் பி்றவியையே

போலவே

கொடு 

தப்பாது,,,,,,,,,,,,,,,,,,

கட்டாய கவிஞன்

ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

 

 

Share this:

Write a Reply or Comment

five × 1 =