வாஸ்து பயிற்சி வகுப்பு – I (Vastu Practitioner Training – I)

வாஸ்து பயிற்சி வகுப்பின் நிறைவு நாளான 07-05-2015 அன்று கோயம்புத்தூர் Le Royal Meridien – ல் நடந்த நிகழ்ச்சியின் ஒரு சிறு பகுதியின் தொகுப்பு….

ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவிலில் அருள்மிகு வடபத்ரசயனர் (வடபெருங்கோவிலுடையான்) – க்கு ஜீர்ணோத்தாரண மஹாசம்ப்ரோக்ஷண அழைப்பிதழ்: –

ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீவடபத்ரசயனருக்கும், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீலக்ஷ்மி வராஹர், ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீபெரியாழ்வார், தமிழக அரசின் சின்னமான ராஜகோபுரம், விமானங்கள் மற்றும் அனைத்து மூர்த்திகளுக்கும் நிகழும் மன்மத வருஷம் வைகாசி மாதம் 8ம் தேதி(22-05-2015) வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி, புனர்பூச நட்சத்திரம், சித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் மிதுன லக்னத்தில் ஸ்ரீ வைகானஸ பகவத் சாஸ்த்திர முறைப்படி மஹா சம்ப்ரோக்ஷ்ணம் நடைபெற  உள்ளது. இவ்வைபவத்தில் ஸ்ரீமத் பரமஹம்ஸ வானமாமலை […]

காலமும், பாவமும்

ஸ்ரீ சென்னை மிகவும் முன்னேறி இருக்கின்றது என்பதை நான் இரண்டு விஷயங்களில் பார்க்கின்றேன். நிறைய முடி திருத்தகம் சென்னைக்கு வந்திருக்கின்றது. தடுக்கி விழுந்தால் கூட Mobile Top-up கடையில் தான் விழ வேண்டும் என்கின்ற அளவிற்கு Mobile Top-up கடைகளின் எண்ணிக்கை அளவு உள்ளது சென்னை மக்களுக்குக்காக விஞ்ஞானம் அளவுக்கதிகமாக தேவையற்ற விஷயங்களில் வளர்ந்திருந்தாலும் அதை விட ஒரு குறிப்பிட்ட விஷயம் மிகவும் கவலைக்கிடமான முறையில் சென்னை மக்களிடம் வளர்ந்து உள்ளது என்றால் அது ஒத்துக் கொண்ட […]

ஆசையும், பேராசையும்…

ஸ்ரீ நாம் குறிப்பிட்ட ஓரிடத்திற்கு செல்வதற்கு பஸ்ஸிலோ அல்லது BMW காரிலோ பயணம் மேற்கொண்டாலும் சாலை ஒரே சாலை தான்… நாம் குறிப்பிட்ட ஓரிடத்திற்கு செல்வதற்கு விமானத்தில் அந்த  விமானத்தின் முதல் வகுப்பிலோ அல்லது அந்த விமானத்தின் சாதாரண வகுப்பிலோ சென்றாலும் நாம் போக வேண்டிய இடம் ஒரே இடம் தான்…. நாம் நேரத்தை பார்ப்பதற்கு 50 ரூபாய் கைகடிகாரம் கட்டியிருந்தாலும், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைகடிகாரம் கட்டி இருந்தாலும் ஒரே  நேரத்தை தான் 2 கைகடிகாரங்களும் காண்பிக்க போகின்றன. நாம் ஆசைப்பட்டவாறு சுகபோகமாக வாழ்வது தவறில்லை. ஆனால்  ஆசை பேராசையாக மாறாத வரைக்கும் எதுவும் பிரச்சினையில்லை.  காரணம் ஆசைகளை அடைய முடியும் ஆனால் கண்டிப்பாக  பேராசைகளை அடைய முடியாது. நம்மில் பெரும்பாலோனோர் ஆசைக்கும், பேராசைக்கும் அர்த்தம்  தெரியாமலேயே வளர ஆரம்பிப்பதற்கு முன்பே வளர்ந்து முடிந்த  திருப்தியுடன் வாழ்ந்து முடிந்துவிடுகின்றோம். எனக்கு தெரிந்த வரை  படித்த பெரியவர்களுக்குமே இதன் முழு அர்த்தம் புரியாத போது,  30 வயதே நிரம்பிய ஒரு பெண் எனக்கு நான்கு வருடங்களுக்கு  முன் அதன் முழு  அர்த்தத்தை புரிய வைத்தாள். இன்னும் சில தினங்களில் வாஸ்து பயிற்சி வகுப்பு  I – க்கு  வருபவர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை சந்திக்க இருக்கின்றேன்.  நாங்கள் அந்த பெண்ணை  சந்தித்தபின் கடிதத்தில் சொல்லப்படாத முழு விவரத்தையும் நல்லதொரு தருணத்தில் உங்கள் அனைவருக்கும்  தெரிவிப்பேன்.   திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!   வாழ்க வளமுடன் […]

“நாமக்கல்லின் நவீன நம்மாழ்வார்” திரு.நாகராஜன்

ஸ்ரீ இயற்கையில் இனிக்கும் கத்திரி! கத்திரிக்காய் சாம்பார் இல்லாத கல்யாணமோ, விஷேச நிகழ்ச்சிகளோ கிடையாது என்று சொல்லும் அளவுக்கு, நாம் உணவில் பயன்படுத்தும் தவிர்க்க முடியாத காய்கறிகளில் ஒன்றாக இருக்கிறது, கத்திரிக்காய். அதேநேரத்தில் அதிகளவு நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் காய்கறிகளிலும் கத்திரிக்கு இடமுண்டு. இதன் காரணமாக, ரசாயன விவசாயிகளே கத்திரி பயிரிடத் தயக்கம் காட்டும் நிலையில்… இயற்கை முறையில் பயிரிட்டு சோதனை முயற்சிலேயே லாபத்தை லட்சங்களில் அறுவடை செய்திருக்கிறார், என்னுடைய மிகச் சிறந்த நல்ல நண்பர் மற்றும் […]

இராஜபதியும், இயற்கையின் சதியும்: –

ஸ்ரீ வேடிக்கையான கதை ஒன்றை நான் Business School – ல் படிக்கும் போது விரிவுரையாளர் சொல்ல கேட்டிருக்கின்றேன். அந்த கதை….. ஒருவன் கையில் ரூ.100/- மட்டுமே இருந்தது. அவனுக்கோ 5 Star ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என ஆசை. 5 Star ஹோட்டலில் ஒரு வேளை சாப்பாட்டின் விலை ரூ.1700/- என கேட்டு விசாரித்து கொண்டான். பணம் இல்லாவிட்டாலும் தைரியத்தை வரவழைத்து கொண்டு மூச்சு முட்டும் அளவிற்கு சாப்பிட்டு தீர்த்தான். சாப்பிட்டதற்கு கொடுக்க பணம் தன்னிடம் […]

வாஸ்து – எனக்கு கொடுத்த அற்புத வரங்கள் – 1

ஸ்ரீ சபரி தன்னை தாயாக்கி கடவுளை குழந்தையாக பார்த்தாள்… மீரா தன்னை காதலியாக்கி கடவுளை காதலனாக பார்த்தாள்… ஆண்டாள் மட்டும் தான் தன்னை மனைவியாக்கி கடவுளை கணவனாக பார்த்தாள்… அந்த வகையில் அரங்கனையே தனதாக்கி கொண்ட ஆண்டாளுடைய அன்பின் அளவு அளவிடமுடியாதது. இதனால் தான் என்னவோ ஒவ்வொரு முறை ஆண்டாள் தாயாரை பார்க்கும் போதும் பார்க்கும் அந்த நொடியே இறப்பை தழுவ வேண்டும் என்கின்ற எண்ணம் என் மனம் முழுவதும் வியாபிக்கும். ஆண்டாளை தரிசனம் செய்யும் அந்நேரத்தில் […]

வாஸ்து – விடை தெரியா மர்மங்கள் – 4

ஸ்ரீ சென்னை மாநகரில் மிகப் பெரிய பணக்காரர்களுக்கு என்று அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டி கொடுக்கும் நிறுவனங்களில் முதன்மையான நிறுவனத்தின் உரிமையாளர் எனக்கு இருக்க கூடிய 1000 மிகப்பெரிய பணக்கார வாடிக்கையாளர்களில் ஒருவர். சமீபத்தில் கட்டுமானம் நடந்துகொண்டிருக்கும் அவருடைய 5 கட்டிடங்களுக்கு வாஸ்து ஆலோசனை வழங்க சென்றிருந்தேன். அதில் ஒரு மனையில் உள்ள வீடுகள் எல்லாம் 5000 சதுர அடி விஸ்தீரணம் கொண்டது. ஒவ்வொரு வீடும் பணத்திற்கு வஞ்சனை இல்லாமல் அற்புதமாக வடிமைக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தது. அந்த இடத்தை பார்வையிட்டுக் […]

வாஸ்து – விடை தெரியா மர்மங்கள் – 3

ஸ்ரீ எனக்கு நினைவு தெரிந்து என்னுடைய வாஸ்து அனுபவத்தில் கீழ்கண்ட Dialogue – ஐ ஏறத்தாழ நான் வாஸ்து பார்த்த மக்களில் 40% பேர் சொல்லி கேட்டிருக்கின்றேன். “உங்களுக்கு பூர்வீகம் ஆகாது. தயவுசெய்து வேறு இடத்திற்கு போய் விடுங்கள் என எங்கள் ஜோதிடர் சொல்லி இருக்கின்றார். அதனால் தான் வீடு மாறி இந்த வீட்டில் இருக்கின்றோம்”. ஜோதிடர் பூர்வீகம் ஆகாது என்று சொன்னவர்களின் பூர்வீக வீட்டை ஆராய்ந்து பார்த்ததில் அந்த வீடு பெரிய வாஸ்து தவறுகளுடன் தான் […]

நானும் ஆசிரியை ஆலிசும்: –

ஸ்ரீ நான் இதுவரை இல்லாத அளவிற்கு நெகிழ்ந்து போன நாள் 11-04-2015. காரணம் அன்று தான் எனக்கு மிக, மிக பிடித்த என் ஆலிஸ் டீச்சரை 37 வருடங்களுக்கு பிறகு பார்த்தேன். எனக்கு அவர்கள் 1977 – ல் இரண்டாம் வகுப்பு வகுப்பு ஆசிரியையாக இருந்தார். ஒருமுறை Very Good என்று சொல்லியவாறே கணக்கு பாடத்தில் 20/20 மதிப்பெண் வாங்கி இருக்கிறாய் என்று சொல்லி நோட்டு புத்தகத்தை அவர் என்னிடம் கொடுத்த போது நான் அடைந்த சந்தோஷத்திற்கு […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by