October 11 2018 0Comment

திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில்:

#திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில்: 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பழைமையான வைணவத்திருத்தலம். இத்திருத்தலம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. #கோயில் தகவல்கள்: மூலவர்: நின்ற நாராயணன் உற்சவர்: திருத்தண்காலப்பன் தாயார்: செங்கமலத்தாயார். அன்னநாயகி (ஸ்ரீதேவி) அனந்தநாயகி (நீளாதேவி) அம்ருதநாயகி (பூமாதேவி) தீர்த்தம்: பாபவிநாச தீர்த்தம், பாஸ்கர சங்க, பத்ம அர்ஜூன தீர்த்தங்கள் பிரத்யட்சம்:சல்ய பாண்டியன், ஸ்ரீ வல்லபன், சந்திர கேது (புலி) ஸ்ரீதேவி #மங்களாசாசனம் பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் கட்டிடக்கலையும் பண்பாடும் விமானம்: தேவசந்ர […]

October 11 2018 0Comment

ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில்:

ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில்:   திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று.  #ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதான திருக்கோயில். இத்திருத்தலத்திலிருந்து நான்கு கி.மீ தொலைவில் சேதுக்கரை உள்ளது.  ராமர் அவதாரம் புரிய அருள் புரிந்த பெருமாளும், சயனராமரும் அமைந்துள்ளனர்.  #தலவரலாறு : புல்லவர், காலவர், கண்ணவர் எனும் மூன்று மகரிஷிகளின் தவத்திற்காக பெருமாள் அரச மரமாகவும் ஆதிஜெகநாதப்பெருமாளாகவும் காட்சியளித்த திருத்தலம்.  இந்த ஜெகந்நாதர் தசரதருக்கு ராமபிரான் அவதாரம் புரிய அருளியவர் என்பதால் பெரிய பெருமாள் […]

October 11 2018 0Comment

சௌமியநாராயணப் பெருமாள் கோயில்: 

சௌமியநாராயணப் பெருமாள் கோயில்:   தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. மூலவர் பெயர் சௌமிய நாராயணன்; தாயார் மகாலட்சுமி.  #கோயில் தகவல்கள்: சிறப்பு திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி, மாசி தெப்பத் திருவிழா மற்றும் நவராத்திரி. கட்டடக்கலை :திராவிடக் கட்டிடக் கலை   #கருவறை : கருவறையில், #ஸ்ரீதேவி, #பூதேவி உடனுறை சௌமியநாராயணருடன் மது, கைடபர், இந்திரன், #புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி […]

October 11 2018 0Comment

திருமாலிருஞ்சோலை:

திருமாலிருஞ்சோலை: அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. #தலவரலாறு : சுதபமுனிவர் திருமாலிருஞ்சோலையில் உள்ள நூபுர கங்கை எனும் சிலம்பாற்றில் நீராடும்போது எதிர்பட்ட துர்வாசர் முனிவரை கவனியாது இருக்கக்கண்டு கோபமுற்ற துர்வாசர் சுதபமுனிவரை மண்டூகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார்.  சாபம் நீங்க சுதபமுனிவர் வைகை ஆற்றில் மண்டூக வடிவில் நீண்டகாலம் […]

October 11 2018 0Comment

சாளக்கிராமம்

சாளக்கிராமம்: 1933ம் ஆண்டில் இந்து மதத்தையும், குறிப்பாக சிவலிங்க வழிபாட்டையும் குறைகூறி #ஆர்தர் மைல்ஸ் என்பவர் ஒரு புத்தகம் வெளியிட்டார். பக்கத்திற்குப் பக்கம் இந்து மத பழக்க வழக்கங்களை  “#பகுத்தறிவுப் பகலவன்கள்” குறைகூறுவது போல எழுதினாலும் நிறைய விவரங்களைத் தருகிறார். அதில் ஒன்று சாளக்கிராமம் பற்றியது. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் #லண்டன் சுவாமிநாதன்:- சாளக்கிராமம் என்பது வெழுமூன இருக்கும் ஒரு கல். அதற்குள் விஷ்ணு சக்கரம் போல அச்சு இருக்கும். இது உண்மையில் உயிரியல் அறிஞர்கள் சோதனைக் கூடங்களில் […]

October 06 2018 0Comment

சாளக்கிராமம் -நடிகர்_விவேக்

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்  வாழ்க வையகம் வாழ்க வளமுடன்  சரித்திரம் படைக்க கோதையின் பாதையில்  நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் இருந்து  6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம் பெருமானின்  சுயம்பு வடிவமான சாளக்கிராமங்களை  இந்தியாவிற்கு எடுத்து வந்து  பின் அவற்றிற்கு உருவேற்றும் வகையில் நேற்று சென்னை அசோக் நகரில் உள்ள அனுமன் கோவிலில் வைத்து நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம்  செய்யும்போது அதை காண சின்ன கலைவாணரும், பிரபல நடிகருமான நண்பர் திரு.விவேக் அவர்கள் வந்து […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by